144 தடை உத்தரவு பன்னிரண்டாவது நாளாக நீடிக்கும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் கரோனா வைரசுக்கு எதிராக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கடலூர் சிறகுகள் அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர் .
கடலூரில் பொதுமக்கள் கூட்டமாக காலை முதல் மாலை வரை சாலைகளில் அதிகளவில் சுற்றித் திரிவதால், மக்களுக்காக காவலர்கள் , மருத்துவத் துறையினர், துப்புரவு காவலர்கள் என அனைவரும் வீதியில் உள்ளனர் .
எனவே பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். வெளியே வருவதை முற்றிலும் தவிர்த்து கரோனா வைரஸை விரட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கடலூர் பாரதி சாலையினை முற்றிலும் முடக்கி சாலை முழுவதும் கரோனா வைரஸின் படத்தை வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையும் படிங்க: ஏழு நாள் விடுமுறை: பணிக்குத் திரும்பிய காவலர்களுக்கும் மருத்துவ பரிசோதனை!