ETV Bharat / state

காதலை கைவிட மறுத்த இளைஞர் குத்திக் கொலை

author img

By

Published : Feb 12, 2020, 8:22 PM IST

கோவை: தன்னுடைய சகோதரி மீதான காதலை கைவிட மறுத்த இளைஞரை கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

murder
murder

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த தாமரை குளம் பகுதியில் வசித்துவருபவர் முத்துச்சாமி. இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு மஞ்சு (22), சந்தியா (20) என்ற இரண்டு மகள்களும் மணிகண்டன் (18) என்ற மகனும் உள்ளனர். அதே பகுதியில் முத்துச்சாமியின் உறவினரான கனகராஜ் மகன் தினேஷ்குமார் (23) என்பவரும் வசித்துவருகிறார்.

தினேஷ்குமார், மணிகண்டன் சகோதரி சந்தியாவை கடந்த இரண்டு மாதங்களாக காதலித்து வந்ததாகவும் இது மணிகண்டனுக்குப் பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன், தினேஷ்குமாரிடம் தனது சகோதரி சந்தியாவிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனை தினேஷ்குமார் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

காதலை கைவிட மறுத்த இளைஞர் குத்திக்கொலை

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மணிகண்டன் குடிபோதையில் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த தினேஷ்குமாரிடம் வந்து தனியாக பேச வேண்டும் என்று மணிகண்டன் அழைத்துச் சென்று அவரிடம் மணிகண்டன் தகராறு செய்தார். இருவருக்கும் வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர்.

அப்போது ஆத்திரத்தில் மணிகண்டன் கத்தியால் தினேஷ்குமார் வயிற்றில் குத்திவிட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த தினேஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த கிணத்துக்கடவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தினேஷ்குமாரைக் கொலைசெய்த மணிகண்டனை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: சிறார் ஆபாச படங்களை பதிவேற்றிய ஓட்டல் தொழிலாளிக்கு நீதிமன்ற காவல்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த தாமரை குளம் பகுதியில் வசித்துவருபவர் முத்துச்சாமி. இவரது மனைவி நீலாவதி. இவர்களுக்கு மஞ்சு (22), சந்தியா (20) என்ற இரண்டு மகள்களும் மணிகண்டன் (18) என்ற மகனும் உள்ளனர். அதே பகுதியில் முத்துச்சாமியின் உறவினரான கனகராஜ் மகன் தினேஷ்குமார் (23) என்பவரும் வசித்துவருகிறார்.

தினேஷ்குமார், மணிகண்டன் சகோதரி சந்தியாவை கடந்த இரண்டு மாதங்களாக காதலித்து வந்ததாகவும் இது மணிகண்டனுக்குப் பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன், தினேஷ்குமாரிடம் தனது சகோதரி சந்தியாவிடம் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனை தினேஷ்குமார் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

காதலை கைவிட மறுத்த இளைஞர் குத்திக்கொலை

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மணிகண்டன் குடிபோதையில் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பு அமர்ந்திருந்த தினேஷ்குமாரிடம் வந்து தனியாக பேச வேண்டும் என்று மணிகண்டன் அழைத்துச் சென்று அவரிடம் மணிகண்டன் தகராறு செய்தார். இருவருக்கும் வாய்த்தகராறு முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர்.

அப்போது ஆத்திரத்தில் மணிகண்டன் கத்தியால் தினேஷ்குமார் வயிற்றில் குத்திவிட்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த தினேஷ்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே தினேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த கிணத்துக்கடவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தினேஷ்குமாரைக் கொலைசெய்த மணிகண்டனை காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இதையும் படிங்க: சிறார் ஆபாச படங்களை பதிவேற்றிய ஓட்டல் தொழிலாளிக்கு நீதிமன்ற காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.