ETV Bharat / state

கோவையில் பெண் தொழிலாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் - பெண் தொழிலாளர்கள்,

கோவை: தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடைகளில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வரைவுக் கொள்கை மீது கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

womens commission
author img

By

Published : Oct 9, 2019, 2:34 PM IST

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழிகாட்டுக் கொள்கை கொண்டுவரப்படுகிறது. இந்த வழிகாட்டுக் கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், ஆயத்த ஆடை பணியாளர்கள், நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது.

பெண் தொழிலாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம்

இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஏழாயிரத்து 400 ஆயத்த ஆடை நிறுவனங்களிலும் நூற்பாலைகளில் 10 லட்சம் பேர் பணியாற்றிவருகின்றனர். அதில் 85 விழுக்காடு பெண் ஊழியர்களே அதிகம் உள்ளனர்.

இவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்தல், ஊதியம், ஓய்வூதியம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கருத்து கேட்கப்பட்டு கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக மகளிர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கு வழிகாட்டுக் கொள்கை கொண்டுவரப்படுகிறது. இந்த வழிகாட்டுக் கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், ஆயத்த ஆடை பணியாளர்கள், நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது.

பெண் தொழிலாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம்

இந்தக் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் இயங்கிவரும் ஏழாயிரத்து 400 ஆயத்த ஆடை நிறுவனங்களிலும் நூற்பாலைகளில் 10 லட்சம் பேர் பணியாற்றிவருகின்றனர். அதில் 85 விழுக்காடு பெண் ஊழியர்களே அதிகம் உள்ளனர்.

இவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்தல், ஊதியம், ஓய்வூதியம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கருத்து கேட்கப்பட்டு கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக மகளிர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை களில் பெண் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வரைவு கொள்கை மீது கருத்து கேட்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது


Body:தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களுக்கான பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் மாண்புமிக்க பணி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடைகளின் பணியாளர்களுக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் வழிகாட்டு கொள்கையை கொண்டுவர உள்ளது அந்த வழிகாட்டு கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் விதமாக வரைவு கொள்கையை வெளியீட்டு நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை பணியாளர்கள், நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் கூட்டமைப்பிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி வருகிறது இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது நூற்றுக்கும் மேற்பட்ட நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும், பெண் பணியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது தமிழ்நாட்டில் இயங்கிவரும் 7400 ஆயத்த ஆடை நிறுவனங்களிலும், நூற்பாலைகளில் 10 லட்சம் பேர் என பணியாற்றி வருகின்றனர் அதில் 85% பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் அவர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி செய்தல் ஊதியம், ஓய்வூதியம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்சனைகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கருத்து கேட்கப்பட்டு கொள்கை உருவாக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.