ETV Bharat / state

அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து இருவர் படுகாயம்!

author img

By

Published : Aug 26, 2019, 9:36 AM IST

கோவை: அன்னூர் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு பயணிகள் படுகாயமடைந்தனர்.

பள்ளத்தில் கவிழ்ந்து கிடக்கும் அரசு பேருந்து

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு இன்று காலை 6.30 மணி அளவில் அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அன்னூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து நிலைதடுமாறியதால், அதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகளில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும் 10 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு இன்று காலை 6.30 மணி அளவில் அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து அன்னூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து நிலைதடுமாறியதால், அதைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திருப்பிய போது, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகளில் இருவர் படுகாயமடைந்தனர். மேலும் 10 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Intro:கோவை மாவட்டம் அன்னூர் அருகே அரசுப் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இருவர் படுகாயம் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்துள்ளனர் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதுBody:ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் பாயிண்ட் டூ பாயிண்ட் அரசு பேருந்து கிளம்பி உள்ளது சுமார் 40 பயணிகள் பேருந்தில் இருந்த நிலையில் பேருந்து அன்னூரை கடந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த போது எல்லப்பாளையம் பிரிவு என்ற இடத்தில் திடீரென இருசக்கர வாகனத்தில் ஒருவர் குறுக்கே வந்ததால் பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை அவர் மீது மோதாமல் இருக்க திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது இந்த விபத்தில் பேருந்தில் வந்த இரண்டு பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் நிலை தெரியவில்லை இதனையடுத்து அங்கு 5க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவருக்கு அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது இவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட உள்ளனர். மீட்புப் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது விபத்தின் காரணமாக கோவை சத்தி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.