ETV Bharat / state

கோவை அருகே பெண்ணிடம் செயின் பறித்த இருவருக்கு அடி, உதை!

கோவை: பெண்ணிடம் செயின் பறித்த இருவரை, பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து அடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

author img

By

Published : Sep 22, 2020, 5:49 PM IST

covai
covai

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினா. இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோயில் அருகே உள்ள மளிகைக்கடைக்கு இன்று காலை பொருள்கள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரத்தினம் கழுத்திலிருந்த செயினைப் பறித்துவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளனர்.

அப்போது அந்தப் பெண் குரல் எழுப்பவே, அருகிலிருந்த பொதுமக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர்.

பின்னர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவே அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகூப், ரத்துல் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் எங்கெங்கு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினா. இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோயில் அருகே உள்ள மளிகைக்கடைக்கு இன்று காலை பொருள்கள் வாங்க சென்றுள்ளார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ரத்தினம் கழுத்திலிருந்த செயினைப் பறித்துவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளனர்.

அப்போது அந்தப் பெண் குரல் எழுப்பவே, அருகிலிருந்த பொதுமக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து கம்பத்தில் கட்டிவைத்து அடித்தனர்.

பின்னர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவே அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் போத்தனூர் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகூப், ரத்துல் என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் எங்கெங்கு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர் என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.