ETV Bharat / state

வால்பாறையில் டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழப்பு

author img

By

Published : Dec 1, 2020, 1:28 PM IST

கோயம்புத்தூர்: வால்பாறை அருகே பழுதடைந்த டிராக்டரை இயக்கிய ஓட்டுநர் பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்தார்.

Tractor overturns
Valparai

கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டில் டேங்கர் டிராக்டர் ஓட்டுநராக கென்னடி (56) என்பவர் வேலை பார்த்துவருகிறார். இவர் இன்று (டிச. 01) காலை எட்டு மணி அளவில் கல்பாலம் என்னுமிடத்தில் டேங்கர் டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது பிரேக் இல்லாத காரணத்தினால் சுமார் 400 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் அடிக்கடி வண்டி பழுது காரணத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிர்வாகம் பதினைந்து நாள் இடைநீக்கம் செய்து மீண்டும் பணி அமர்த்தி உள்ளது. நேற்று காலை டிராக்டரை ஓட்டிச்செல்ல வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஓட்ட மறுத்த கென்னடி பிரேக் மற்றும் கிளச் இல்லாத காரணத்தால் வண்டி ஓட்ட முடியாது என்று கூறியும் இன்று காலை அதே வண்டியை ஓட்டச் சொல்லி வற்புறுத்திய காரணத்தினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

கோயமுத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டில் டேங்கர் டிராக்டர் ஓட்டுநராக கென்னடி (56) என்பவர் வேலை பார்த்துவருகிறார். இவர் இன்று (டிச. 01) காலை எட்டு மணி அளவில் கல்பாலம் என்னுமிடத்தில் டேங்கர் டிராக்டரில் சென்று கொண்டிருந்தபோது பிரேக் இல்லாத காரணத்தினால் சுமார் 400 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இவருக்கும் அந்த நிறுவனத்திற்கும் அடிக்கடி வண்டி பழுது காரணத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிர்வாகம் பதினைந்து நாள் இடைநீக்கம் செய்து மீண்டும் பணி அமர்த்தி உள்ளது. நேற்று காலை டிராக்டரை ஓட்டிச்செல்ல வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஓட்ட மறுத்த கென்னடி பிரேக் மற்றும் கிளச் இல்லாத காரணத்தால் வண்டி ஓட்ட முடியாது என்று கூறியும் இன்று காலை அதே வண்டியை ஓட்டச் சொல்லி வற்புறுத்திய காரணத்தினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.