ETV Bharat / state

வால்பாறையில் டிராக்டர் மோதி கட்டட மேஸ்திரி உயிரிழப்பு

author img

By

Published : Jul 21, 2019, 3:54 PM IST

கோவை: வால்பாறையில் கட்டட மேஸ்திரி மீது டிராக்டர் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

construction master

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்(50). கட்டட மேஸ்திரியான இவர் அதே பகுதியில் உள்ள குரங்குமுடி எஸ்டேட்டிற்கு தண்ணீர் கொண்டு சென்ற டிராக்டர் டேங்கரில் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த மரக்கிளை தன் மீது மோதப்போகிறது என பயந்து டிராக்டரில் இருந்து குதித்துள்ளார்.

டிராக்டர் மோதி உயிரிழந்த கட்டட மேஸ்திரி

ஆனால் இதை கவனிக்காத டிரைவர் டிராக்டரை தொடர்ந்து இயக்கியதால் சக்கரம் ஏறி இறங்கி மேஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம், வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம்(50). கட்டட மேஸ்திரியான இவர் அதே பகுதியில் உள்ள குரங்குமுடி எஸ்டேட்டிற்கு தண்ணீர் கொண்டு சென்ற டிராக்டர் டேங்கரில் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த மரக்கிளை தன் மீது மோதப்போகிறது என பயந்து டிராக்டரில் இருந்து குதித்துள்ளார்.

டிராக்டர் மோதி உயிரிழந்த கட்டட மேஸ்திரி

ஆனால் இதை கவனிக்காத டிரைவர் டிராக்டரை தொடர்ந்து இயக்கியதால் சக்கரம் ஏறி இறங்கி மேஸ்திரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து டிராக்டர் டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:valpariissueBody:valpariissueConclusion:வால்பாறையில் டிராக்டர் டேங்கர் சக்கரம் ஏறி கட்டிட மேஸ்திரி பலி
வால்பாறை ஜூலை 21
கோவை மாவட்டம் வால்பாறை நகர் சிறுவர் பூங்கா பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் வயது 50. இவர் ஒப்பந்த்தாரர் பார்த்திபன் என்பவரிடம் கட்டிட வேலையை கண்கானிக்கும் மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட்டில் சார்பில் கட்டப்படும் பாதுகாப்பு சுவர் பணிக்காக இன்று மாலை டிராக்டர் டேங்கர் மூலம் தண்ணீர் எடுத்து வரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தண்ணீர் நிரப்பிய டிராக்டரை மாசாணி என்வர் இயக்க சுந்தரம் டிராக்டர் எஞ்சினின் பின்பக்கம் நின்று கொண்டு வந்தார். அப்போது திடீரென மரக்கிளை ஒன்று சாலையில் விழுவதை பார்த்த அச்சத்தில் டிராக்டரை விட்டு சுந்தரம் கீழே குதித்துள்ளார். இந்நிலையில் சுந்தரம் குதித்ததை டிரைவர் கவனிக்காததால் சுந்தரத்தின் மீது டிராக்டர் டேங்கரின் சக்கரம் தலை மீது ஏறியது இதனால் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே சுந்தரத்தின் மீது மரம் விழுந்ததாக தகவல் பரவியதை அடுத்து வால்பாறையில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வால்பாறை காவல் ஆய்வாளர் முருகேசன் சடலத்தை கைபற்றி வால்பாறை அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் சுந்தரம் டிராக்டரில் இருந்து விழுந்து சக்கரம் ஏறி இறந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து டிராக்டரை ஓட்டிய மாசானி கைது செய்யப்பட்டார் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் வால்பாறையில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.