ETV Bharat / state

வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நடும் மனிதர்!!

பொள்ளாச்சி: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு வெட்டபட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பவருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

author img

By

Published : Jul 17, 2019, 10:00 PM IST

வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகளை நடும் மனிதர்!!

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிக்காக சாலையோர மரங்கள் அழிக்கப்படுவதை பார்த்து பொறுக்க முடியாத சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, தற்போது பல்வேறு நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.

மனைவி ஜெயசீலா, இரு குழந்தைகளின் உதவியுடன் இப்பணியை ஜெகநாதன் செய்து வருகிறார்.

வெட்டபட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை குடும்பத்தோடு நட்டு பராமரிக்கும் நபர்.

நடப்பட்ட அத்தனை மரக்கன்றுகளுக்கும், குளுக்கோஸ் பாட்டில்களை பயன்படுத்தி 'டிரிப்ஸ்' முறையில் நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், மரக்கன்றுகளை விலைக்கு வாங்கும் செலவுகளையும் அவர்களே ஏற்றுள்ளனர்.

வீட்டுக்கு மரம் வளர்ப்பதைவிட, இப்படி பொது இடங்களில் மரங்களை வளர்ப்பதால், இந்த நாட்டுக்கே பயனளிக்கும் என கூறுகிறார் ஜெகநாதன்.

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிக்காக சாலையோர மரங்கள் அழிக்கப்படுவதை பார்த்து பொறுக்க முடியாத சின்னாம்பாளையத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, தற்போது பல்வேறு நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்.

மனைவி ஜெயசீலா, இரு குழந்தைகளின் உதவியுடன் இப்பணியை ஜெகநாதன் செய்து வருகிறார்.

வெட்டபட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை குடும்பத்தோடு நட்டு பராமரிக்கும் நபர்.

நடப்பட்ட அத்தனை மரக்கன்றுகளுக்கும், குளுக்கோஸ் பாட்டில்களை பயன்படுத்தி 'டிரிப்ஸ்' முறையில் நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும், மரக்கன்றுகளை விலைக்கு வாங்கும் செலவுகளையும் அவர்களே ஏற்றுள்ளனர்.

வீட்டுக்கு மரம் வளர்ப்பதைவிட, இப்படி பொது இடங்களில் மரங்களை வளர்ப்பதால், இந்த நாட்டுக்கே பயனளிக்கும் என கூறுகிறார் ஜெகநாதன்.

Intro:tree familyBody:tree familyConclusion:பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்க்கு வெட்டபட்ட பின் சாலைகுடும்பத்துடன் மரம் வளர்க்கும் மனிதர்.பொள்ளாச்சி – 17வளர்ந்து வரும் நகரங்களின் வளர்ச்சிக்கேற்ப சாலை விரிவாக்கம் அவசியம்தான் என்றாலும், அதற்காக, சாலையோர மரங்கள் அழிக்கப்படுவதை பார்த்து இதயம் கலங்கியவர்களில் பொள்ளாச்சி, சின்னாம்பாளையத்தை சேர்ந்த ஜெகநாதனும் ஒருவர். அப்படி வெட்டப்பட்ட மரங்களுக்கு இணையாக புதிய மரங்களை வளர்க்க, குடும்பத்துடன் களமிறங்கியிருக்கிறார் அவர். பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கப் பணிக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக, தற்போது, பல்வேறு நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். மனைவி ஜெயசீலா, இரு குழந்தைகளின் உதவியுடன் இப்பணியை ஜெகநாதன் செய்து வருகிறார். நடப்பட்ட அத்தனை மரக்கன்றுகளுக்கும், குளுக்கோஸ் பாட்டில்களை பயன்படுத்தி 'டிரிப்ஸ்' முறையில் நாள் முழுவதும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த முறையால், தண்ணீர் தேவை குறைவதோடு, இதை பார்ப்பவர்களுக்கும், மரக்கன்றுகளை சேதப்படுத்தாமல் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதாக கூறுகிறார். ஆச்சிப்பட்டி, மோதராபுரம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலம்பட்டி சாலையோரங்களில் இதுவரை 200க்கும் மேற்பட்ட மரங்களை ஜெகநாதன் குடும்பத்தினர் நட்டு வளர்த்து வருகின்றனர். நாட்டு மரக்கன்றுகளை விலைக்கு வாங்கும் செலவுகளையும் அவர்களே ஏற்கின்றனர். வீட்டுக்கு மரம் வளர்ப்பதை விட, இப்படி பொது இடங்களில் மரங்களை வளர்ப்பதால், இந்த நாட்டுக்கே பயனளிக்குமே என தன்னலமின்றி கூறும் இக்குடும்பத்தின் மரம் வளர்ப்பு சேவையை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சமூக நல அமைப்புகளும் இவர்களுக்கு உதவினால், அவர்களின் சேவை மேலும் வளர்ந்து விருட்சமாகும்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.