ETV Bharat / state

தென்றல் செல்வராஜ் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு தேவை! - பாதுகாப்பு வேண்டி மனு

கோவை: திமுகவின் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் குடும்பத்தினருக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன், காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

தென்றல் செல்வராஜ்
author img

By

Published : Apr 15, 2019, 3:07 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரத்தில் நீதி கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். இப்போராட்டத்தினால் சமூகவிரோதிகள் மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்து அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தென்றல் செல்வராஜ்
தென்றல் செல்வராஜ்

மேலும், தொடர்ந்து சமூகப் பிரச்னைகளை பொதுமக்கள் மத்தியில் அமல்படுத்தி வருவதாலும் அவர் அதிமுகவினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் பரப்புரை செய்து கொண்டிருப்பதால் சமூகவிரோதிகள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. மேலும், செல்வராஜ் வீட்டில் இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே அவரது வீட்டிற்கும் அவரது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலைமை உள்ளது.

தென்றல் செல்வராஜ்

மேலும் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறி போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார். இது ஏதோ உள்நோக்கத்துடன் இருப்பதாகக் கருதி, திமுக புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன் தலைமையில் திமுகவினர், பொள்ளாச்சி கோட்டாட்சியர் ரவிக்குமார் மற்றும் காவல் உதவி கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

தென்றல் செல்வராஜ்
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் குடும்பத்தினருக்கும் போலீஸ் பாதுகாப்பு கோரி ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் மனு.   

ஏப்ரல் 15. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தென்றல் செல்வராஜ் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்குகளில் நீதி கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் சமூகவிரோதிகள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களால் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்த வண்ணம் உள்ளன மேலும் தொடர்ந்து சமூகப் பிரச்சினைகளும் அதிமுகவினர் ஊழல்களை பொதுமக்கள் மத்தியில் அமல்படுத்தி வருவதாலும் அதிமுகவினரின் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளர். மக்களவைத் தேர்தலை ஒட்டி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதால் சமூகவிரோதிகள் மற்றும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தல் இருப்பதால் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் செல்வராஜ் அவர்கள் வீட்டில் முன்னர் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது எனவே அவரது வீட்டிற்கும் அவரது  குடும்பத்தினர்  உயிருக்கு ஆபத்து ஏற்படும்  அச்சம் நிலவுவதாக உள்ளது  மேலும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாக கூறி  போலீஸ் பாதுகாப்பு கேட்டுள்ளார் இது ஏதோ உள்நோக்கத்துடன் இருப்பதாகக் கருதி எங்கள்  திமுக புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும்  குடும்பத்தினருக்கும்  பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறி ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் தேவேந்திரன் தலைமையில் திமுகவினர் பொள்ளாச்சி கோட்டாட்சியர் ரவிக்குமார் மற்றும் உதவி கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர் இதில் நகர துணைச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர் ஷநாவஸ்கான் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உடன் இருந்தனர். பேட்டி பெயர் - கார்த்திகேயன்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.