ETV Bharat / state

கோவையில் குடிநீர் பற்றாக்குறை: சிறுவாணி அணையில் அபாய நிலை!

author img

By

Published : Jun 3, 2023, 5:45 PM IST

சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்துள்ளதால் கோவையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

கோயம்புத்தூர்: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாக குறைந்துள்ளது என்றும் இதனால் வரும் நாள்களில் கோவை மாநகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்படும் என மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாநகரில் 26 வார்டுகள் என 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை தன் முழு கொள்ளளவாக 49.50 அடியை கொண்டுள்ளது.

இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மார்ச்சில் அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து 6அடியாகச் சரிந்தது. இதனைத் தொடர்ந்து பின்வரும் மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் சரிந்தது.

தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாததாலும், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து உள்ளதாலும், கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2.85 அடியாகக் குறைந்துள்ளது. இதனால், குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து, 3.60 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Odisha train accident: ஒடிசாவின் மீண்டும் ஒரு 'கருப்பு வெள்ளி'.. வரலாற்றில் 2வது முறையாக நிகழ்ந்த கோர விபத்து

வரும் நாள்களில், அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “ஜூன் இறுதிக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம், பருவ மழை தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரும்.

பின்னர், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். மாநகரில் சிறுவாணி நீர் விநியோகிக்கும் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டைப் போல பில்லூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இனி ‘ஜில்’தான்.. தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு

கோயம்புத்தூர்: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 2.85 அடியாக குறைந்துள்ளது என்றும் இதனால் வரும் நாள்களில் கோவை மாநகரில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் அபாயம் ஏற்படும் என மக்கள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாநகரில் 26 வார்டுகள் என 20க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை உள்ளது. இந்த அணை தன் முழு கொள்ளளவாக 49.50 அடியை கொண்டுள்ளது.

இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பிப்ரவரி மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. மார்ச்சில் அணையின் நீர் மட்டம் கணிசமாக குறைந்து 6அடியாகச் சரிந்தது. இதனைத் தொடர்ந்து பின்வரும் மாதங்களான ஏப்ரல், மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் சரிந்தது.

தற்போது, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லாததாலும், வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து உள்ளதாலும், கடந்த வாரத்தில் 3.94 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2.85 அடியாகக் குறைந்துள்ளது. இதனால், குடிநீருக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு வரும் குடிநீரின் அளவு 4.50 கோடி லிட்டரில் இருந்து, 3.60 கோடி லிட்டராகக் குறைக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: Odisha train accident: ஒடிசாவின் மீண்டும் ஒரு 'கருப்பு வெள்ளி'.. வரலாற்றில் 2வது முறையாக நிகழ்ந்த கோர விபத்து

வரும் நாள்களில், அணையின் நீர்மட்டம் மேலும் குறைந்தால், மாநகரில் குடிநீர் பற்றாக் குறை ஏற்பட வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “ஜூன் இறுதிக்குள் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம், பருவ மழை தொடங்கி விட்டால் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயரும்.

பின்னர், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். மாநகரில் சிறுவாணி நீர் விநியோகிக்கும் பகுதிகளில் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் கடந்தாண்டைப் போல பில்லூர் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இனி ‘ஜில்’தான்.. தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.