ETV Bharat / state

பொள்ளாச்சியில் 10 அடி நீள மலைப்பாம்பு..

author img

By

Published : Oct 31, 2022, 10:43 AM IST

பொள்ளாச்சி அருகே ஆனைமலை கிழவன்புதூரில் தனியார் தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

Etv Bharat
Etv Bharat

கோவை: பொள்ளாச்சி அருகே கிழவன் புதூரில் நேற்று (அக்.30) தனியார் தோட்டத்தில் பத்தடி நீள மலைப்பாம்பு புதரில் பதுங்கி இருப்பதாக WHCT தன்னார்வலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற அவர்கள், புதரில் பதுங்கி இருந்த பத்தடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், அந்த பாம்பு ஆழியாரில் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மலைப்பாம்பு நாகப் பாம்பு, மண்ணுளி, கட்டுவிரியன் உள்ளிட்ட அனைத்து வகை பாம்புகளை பிடிப்பதற்காக வனத்துறை மூலம் பாம்பு பிடிப்பதில் நன்கு பயிற்சி பெற்ற WHCT தன்னார்வலர் அமைப்பு மூலம் பாம்புகளை பிடிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

தனியார் தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு..

ஆனைமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள வீடு மற்றும் தோட்டங்களில் பாம்புகள் தென்பட்டால் உடனடியாக இவர்களுக்கு தெரிவித்தால், அவர்கள் வந்து பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து பின்னர் அவற்றை அடர்ந்த வனப்பகுதியில் விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆனைக்கட்டி பழங்குடியினப் பெண்கள் குறித்த பிரதமர் மோடியின் குட்டிக்கதை

கோவை: பொள்ளாச்சி அருகே கிழவன் புதூரில் நேற்று (அக்.30) தனியார் தோட்டத்தில் பத்தடி நீள மலைப்பாம்பு புதரில் பதுங்கி இருப்பதாக WHCT தன்னார்வலருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற அவர்கள், புதரில் பதுங்கி இருந்த பத்தடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், அந்த பாம்பு ஆழியாரில் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மலைப்பாம்பு நாகப் பாம்பு, மண்ணுளி, கட்டுவிரியன் உள்ளிட்ட அனைத்து வகை பாம்புகளை பிடிப்பதற்காக வனத்துறை மூலம் பாம்பு பிடிப்பதில் நன்கு பயிற்சி பெற்ற WHCT தன்னார்வலர் அமைப்பு மூலம் பாம்புகளை பிடிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

தனியார் தோட்டத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு..

ஆனைமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள வீடு மற்றும் தோட்டங்களில் பாம்புகள் தென்பட்டால் உடனடியாக இவர்களுக்கு தெரிவித்தால், அவர்கள் வந்து பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து பின்னர் அவற்றை அடர்ந்த வனப்பகுதியில் விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆனைக்கட்டி பழங்குடியினப் பெண்கள் குறித்த பிரதமர் மோடியின் குட்டிக்கதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.