ETV Bharat / state

ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு - நகராட்சியின் அதிரடி அறிவிப்பு!

author img

By

Published : Jul 9, 2022, 6:08 PM IST

ராணுவம், துணை ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களின் வீடுகளுக்கு கூடலூர் நகராட்சி வீட்டு வரி, குடிநீர் வரியில் விலக்கு அளித்துள்ளது.

ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு - கூடலூர் நகராட்சி தலைவரின் அதிரடி அறிவிப்பு!
ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு - கூடலூர் நகராட்சி தலைவரின் அதிரடி அறிவிப்பு!

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்து கூடலூர் நகராட்சி அமைந்துள்ளது. அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கூடலூர் நகராட்சியில், திமுகவைச் சேர்ந்த அறிவரசு என்பவர் தலைவராக உள்ளார். நகராட்சி தலைவராக பதவியேற்ற முதல் கூட்டத்தில், ‘கூடலூர் நகராட்சியில் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இலவசமாக சான்றிதழ் பெறலாம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இதற்கு மக்களிடையே மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முதல் தீர்மானமாக, ‘கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருக்கும், ராணுவத்தில் பல்வேறு பணிகளில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்: இதன்படி ராணுவம், துணை ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களின் வீடுகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி கட்டத் தேவையில்லை என கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இந்த அறிவிப்பை நகராட்சி தலைவர் அறிவரசு தெரிவித்தார். இந்த தீர்மானத்திற்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு
ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு

இதுகுறித்து நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், “மற்ற பணிகளில் உள்ளவர்கள் அடிக்கடி தங்கள் வீட்டுக்கு வந்து செல்ல முடியும். ஆனால் எல்லையில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே நாட்டிற்காக பாடுபடும் ராணுவ வீரர்கள், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தங்களது வீடுகளுக்கு வந்து செல்கின்றனர்.

நாட்டுக்காக கடமை உணர்வோடு இரவு - பகல், வெயில் - மழை பாராமல் உழைக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு மதிப்பும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்கள் கூடலூர் நகராட்சிக்குள் இருந்தால் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக ராணுவ வீரர்களுக்கு இந்தத் திட்டத்தை எங்களது நகராட்சியில் நடத்த நடைமுறைப்படுத்தி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது ராணுவ வீரர்களுக்கு நாங்கள் செய்யும் மரியாதை. கூடலூர் நகராட்சியில் 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம்.

அனைவருக்கும் வேண்டும்: இவர்களின் குடும்பத்தினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சொத்து வரி, குடிநீர் வரி புத்தகத்தில் ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து சீல் வைத்து தர திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய சிறப்பு காவல் படையில் உதவி ஆய்வாளராக உள்ள இளைய பெருமாள், “நான் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பணியாற்றி வருகிறேன்.

தற்போது ஒரு மாத விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. சொத்து வரி, குடிநீர் வரி விலக்கு என்பது பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து பல்வேறு இன்னல்களில் பணியாற்றி வரும் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள முடியாத சூழலில் உள்ள எங்களின் சிரமங்களை அறிந்து, நகராட்சி நிர்வாகம் இந்த வரி விலக்கைக் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோன்று பல இடங்களில் இதனை விரிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு - கூடலூர் நகராட்சி தலைவரின் அதிரடி அறிவிப்பு!

இதையும் படிங்க: மாணவிகளே அலர்ட்! - ரூ.1000 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்து கூடலூர் நகராட்சி அமைந்துள்ளது. அண்மையில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கூடலூர் நகராட்சியில், திமுகவைச் சேர்ந்த அறிவரசு என்பவர் தலைவராக உள்ளார். நகராட்சி தலைவராக பதவியேற்ற முதல் கூட்டத்தில், ‘கூடலூர் நகராட்சியில் இறப்பு சான்றிதழுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் இலவசமாக சான்றிதழ் பெறலாம்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார்.

இதற்கு மக்களிடையே மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளது. தொடர்ந்து கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற நகர் மன்ற கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் முதல் தீர்மானமாக, ‘கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருக்கும், ராணுவத்தில் பல்வேறு பணிகளில் பணியாற்றி வரும் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றம்: இதன்படி ராணுவம், துணை ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்களின் வீடுகளுக்கு சொத்து வரி, குடிநீர் வரி கட்டத் தேவையில்லை என கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, இந்த அறிவிப்பை நகராட்சி தலைவர் அறிவரசு தெரிவித்தார். இந்த தீர்மானத்திற்கு அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு
ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு

இதுகுறித்து நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், “மற்ற பணிகளில் உள்ளவர்கள் அடிக்கடி தங்கள் வீட்டுக்கு வந்து செல்ல முடியும். ஆனால் எல்லையில் பல்வேறு இன்னல்களுக்கு இடையே நாட்டிற்காக பாடுபடும் ராணுவ வீரர்கள், வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தங்களது வீடுகளுக்கு வந்து செல்கின்றனர்.

நாட்டுக்காக கடமை உணர்வோடு இரவு - பகல், வெயில் - மழை பாராமல் உழைக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு மதிப்பும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்கள் கூடலூர் நகராட்சிக்குள் இருந்தால் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

தமிழ்நாட்டில் முதல்முறையாக ராணுவ வீரர்களுக்கு இந்தத் திட்டத்தை எங்களது நகராட்சியில் நடத்த நடைமுறைப்படுத்தி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது ராணுவ வீரர்களுக்கு நாங்கள் செய்யும் மரியாதை. கூடலூர் நகராட்சியில் 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களின் விவரங்களை சேகரித்து வருகிறோம்.

அனைவருக்கும் வேண்டும்: இவர்களின் குடும்பத்தினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சொத்து வரி, குடிநீர் வரி புத்தகத்தில் ராணுவ வீரர்களின் வீடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து சீல் வைத்து தர திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய சிறப்பு காவல் படையில் உதவி ஆய்வாளராக உள்ள இளைய பெருமாள், “நான் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பணியாற்றி வருகிறேன்.

தற்போது ஒரு மாத விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ள நிலையில், நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. சொத்து வரி, குடிநீர் வரி விலக்கு என்பது பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து பல்வேறு இன்னல்களில் பணியாற்றி வரும் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

குடும்ப நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள முடியாத சூழலில் உள்ள எங்களின் சிரமங்களை அறிந்து, நகராட்சி நிர்வாகம் இந்த வரி விலக்கைக் கொண்டு வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோன்று பல இடங்களில் இதனை விரிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு வரி விலக்கு - கூடலூர் நகராட்சி தலைவரின் அதிரடி அறிவிப்பு!

இதையும் படிங்க: மாணவிகளே அலர்ட்! - ரூ.1000 ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.