கோவை மாவட்டத்தில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறையினருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோவை போத்தனூர், சூலூர், துடியலூர் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் அவர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, அந்த அந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மதுக்கரையில் ரோந்துப் பிரிவில் பணியாற்றி வந்த காவலர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மதுக்கரை காவலர்கள் 40 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதற்கான பரிசோதனை முடிவுகள் இன்று(ஜூலை 15) வெளியானது. அதில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து 7 பேரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து சுகாதாரத் துறை அலுவலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் மதுக்கரை காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்து சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா அப்டேட்: 24 மணி நேரத்தில் 584 பேர் மரணம்