ETV Bharat / state

பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவிக்கு நேர்ந்த கொடுமை - 4 பேர் கைது!

author img

By

Published : Dec 1, 2019, 10:36 AM IST

Updated : Dec 1, 2019, 7:28 PM IST

கோவை: பூங்காவிற்கு ஆண் நண்பர்களுடன் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த, நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

school girl rape accused arrested under posco Law
மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேர் கைது

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி அப்பகுதியிலுள்ள பூங்காவிற்கு, தனது ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காகச் சென்றுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாணவியின் நண்பர்களில் ஒருவரான மணிகண்டன் என்ற இளைஞர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை நண்பர்களின் உதவியோடு வீடியோவும் எடுத்துள்ளார்.

மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேர் கைது

இச்சம்பவத்தில் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்த ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் ஆர்.எஸ். புரம் மகளிர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

இதில் தலைமறைவான முக்கியக் குற்றவாளியான மணிகண்டன் மற்றும் அவரது நண்பரை காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் கூட்டு பாலியல் வன்கொடுமை என தகவல் வெளியான நிலையில், காவல் துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தெலங்கானா பெண் மருத்துவர் கொலை வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 26 ஆம் தேதி அப்பகுதியிலுள்ள பூங்காவிற்கு, தனது ஆண் நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காகச் சென்றுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மாணவியின் நண்பர்களில் ஒருவரான மணிகண்டன் என்ற இளைஞர், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை நண்பர்களின் உதவியோடு வீடியோவும் எடுத்துள்ளார்.

மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த நான்கு பேர் கைது

இச்சம்பவத்தில் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்த ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் ஆர்.எஸ். புரம் மகளிர் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.

இதில் தலைமறைவான முக்கியக் குற்றவாளியான மணிகண்டன் மற்றும் அவரது நண்பரை காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.

மேலும், இச்சம்பவம் கூட்டு பாலியல் வன்கொடுமை என தகவல் வெளியான நிலையில், காவல் துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தெலங்கானா பெண் மருத்துவர் கொலை வழக்கு விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றம்.!

Intro:கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்காவில் நண்பர்களுடன் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவியை நண்பர்கள் உடந்தையுடன் பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது மேலும் இருவரை தேடி வருகின்றனர்..Body:கோவை சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்காவில் நண்பர்களுடன் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவியை நண்பர்கள் உடந்தையுடன் பாலியல் வன்கொடுமை செய்த மணிகண்டன் மற்றும் உடந்தையாக இருந்த மற்றொரு நபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த் 26 ஆம் தேதி நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவியை மணிகண்டன் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்ததோடு , அதனை நண்பரை கொண்டு வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் மணிகண்டனுக்கு உடந்தையாக இருந்ததாக ராகுல், பிரகாஷ் , கார்த்திகேயன் , மற்றும் நாராயண மூர்த்தியை ஆர்.எ ஸ் புரம் மகளிர் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் மற்றொரு இளைஞரை தனிப்படை கொண்டு காவல்துறையினர் தேடி வருவதாக காவல்துறையினர் தகவல் கூட்டுபாலியல் வன்கொடுமை என தகவல் வெளியான நிலையில் காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
Conclusion:
Last Updated : Dec 1, 2019, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.