ETV Bharat / state

பொள்ளாச்சியில் விவசாயிகளை அச்சுறுத்தும் புலியைப் பிடிக்க கூண்டு - Sarkarpathey Tiger Issue

கோவை: பொள்ளாச்சி அருகே ஆடுகளைக் கொன்று விவசாயிகளை அச்சுறுத்திவரும் புலியைப் பிடிக்க கூண்டு அமைத்து வனத் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் புலியை பிடிக்க கூண்டு பொள்ளாச்சி புலிகள் பிரச்சினை சர்க்கார்பதி புலிகள் பிரச்சினை Pollachi Tiger Issue Sarkarpathey Tiger Issue Tiger Issues
Sarkarpathey Tiger Issue
author img

By

Published : Feb 1, 2020, 3:44 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், இவரது தோட்டத்தில் புகுந்த புலி, மாட்டுக் கொட்டகையில் கட்டிவைத்திருந்த நான்கு ஆடுகள், ஒரு கன்று குட்டியை கடித்துக் கொன்றது.

இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர், சம்பந்தப்பட்ட பகுதியில் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.

தொடர்ந்து அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை உறுதிப்படுத்திய வனத் துறையினர், அவற்றைப் பிடிக்க இரும்புக் கூண்டை வைத்தனர். கூண்டில் இறைச்சியை வைத்து தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். ஆடுகளைக் கொன்றுவரும் புலி பிடிபட்டதும் வனத் துறையில் விடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

புலியைப் பிடிக்க கூண்டுவைக்கும் வனத் துறை அலுவலர்கள்

இந்த நிலையில், கூண்டு வைக்கப்பட்ட பகுதியை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி பார்வையிட்டார்.

இதையும் படிங்க:

'குற்றவாளிகளின் வழக்கறிஞர் எனக்கு சவால் விடுத்தார்' - நிர்பயாவின் தாய் கண்ணீர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர். கடந்த சில தினங்களுக்கு முன்னர், இவரது தோட்டத்தில் புகுந்த புலி, மாட்டுக் கொட்டகையில் கட்டிவைத்திருந்த நான்கு ஆடுகள், ஒரு கன்று குட்டியை கடித்துக் கொன்றது.

இது குறித்து தகவலறிந்த வனத் துறையினர், சம்பந்தப்பட்ட பகுதியில் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமரா பொருத்தினர்.

தொடர்ந்து அப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதை உறுதிப்படுத்திய வனத் துறையினர், அவற்றைப் பிடிக்க இரும்புக் கூண்டை வைத்தனர். கூண்டில் இறைச்சியை வைத்து தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். ஆடுகளைக் கொன்றுவரும் புலி பிடிபட்டதும் வனத் துறையில் விடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

புலியைப் பிடிக்க கூண்டுவைக்கும் வனத் துறை அலுவலர்கள்

இந்த நிலையில், கூண்டு வைக்கப்பட்ட பகுதியை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி பார்வையிட்டார்.

இதையும் படிங்க:

'குற்றவாளிகளின் வழக்கறிஞர் எனக்கு சவால் விடுத்தார்' - நிர்பயாவின் தாய் கண்ணீர்

Intro:tigerBody:tigerConclusion:பொள்ளாச்சி அருகே ஆடுகளை கொன்று விவசாயிகளை அச்சுறுத்தி வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர்.

பொள்ளாச்சி-ஜன-31.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சர்க்கார்பதி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சங்கர். கடந்த சில தினங்களுக்கு முன்அதிகாலையில் இவரது தோட்டத்தில் புகுந்த புலி ஒன்று மாட்டுக் கொட்டகையில் கட்டி வைத்திருந்த நான்கு ஆடுகளையும் ஒரு கன்று குட்டியையும் கடித்து கொன்றது. இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக விரைந்து வந்து இதுபற்றி விசாரித்து கண்காணிப்பு கேமரா பொருத்தினர். இந்நிலையில் மீண்டும் புலி அங்கு வந்ததை உறுதிப்படுத்திய வனத்துறையினர் அதைப் பிடிக்க இரும்பாலான கூண்டு ஒன்றை வைத்தனர். இறந்த ஆட்டின் இறைச்சியை அந்த கூண்டில் வைத்து தொடர்ந்து கண்காணித்து கொண்டிருப்பதாகவும் கூண்டில் புலி பிடிபட்டவுடன் மேலதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே இன்று மதியம் வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு கூண்டு வைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்டு இந்த சம்பவம் பற்றி விசாரித்து அறிந்தார். பேட்டி- காசிலிங்கம் ( வனசரகர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.