ETV Bharat / state

பயங்கர ஆயுதங்களுடன் உலாவரும் சந்தனமர கடத்தல் கும்பல்: சிசிடிவி காட்சி வெளியீடு!

கோவை: சிங்காநல்லூர் பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் உலாவரும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

author img

By

Published : Dec 6, 2019, 7:40 PM IST

Updated : Dec 6, 2019, 10:52 PM IST

sandalwood trees robbery by unknown persons
பயங்கர ஆயுதங்களுடன் உலா வரும் சந்தன மரம் கடத்தல் கும்பல்

கோவையில் முக்கியப் பகுதிகளில் சந்தன மரத்தை அடையாளம் தெரியாத கும்பல் கடத்திவருகிறது. குறிப்பாக பந்தய சாலை, சாய்பாபா காலனி, கோவைப்புதூர், சிங்காநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்துவரும் கும்பல் வீட்டின் கதவை வெளியே தாழிட்டுவிட்டு இயந்திரங்கள் மூலம் சந்தன மரங்களை வெட்டி கடத்திவருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் பகுதியில் 15 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் உலாவந்தனர். பின்னர் அருகிலிருந்த தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் புகுந்து அங்கு மது அருந்திவிட்டு சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல முயன்றனர்.

பயங்கர ஆயுதங்களுடன் உலா வரும் சந்தன மரம் கடத்தல் கும்பல்

அப்போது, அப்பகுதி இளைஞர்கள் அந்தக் கும்பலை விரட்டியடித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றும் கும்பலால் வெளியே செல்லவே அச்சப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

பயங்கர ஆயுதங்களுடன் மரத்தை வெட்ட அந்தக் கும்பல் ஒரு வீட்டுக்கு முன்பு பதுங்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த காவலருக்குச் சிறை!

கோவையில் முக்கியப் பகுதிகளில் சந்தன மரத்தை அடையாளம் தெரியாத கும்பல் கடத்திவருகிறது. குறிப்பாக பந்தய சாலை, சாய்பாபா காலனி, கோவைப்புதூர், சிங்காநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்துவரும் கும்பல் வீட்டின் கதவை வெளியே தாழிட்டுவிட்டு இயந்திரங்கள் மூலம் சந்தன மரங்களை வெட்டி கடத்திவருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் பகுதியில் 15 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் உலாவந்தனர். பின்னர் அருகிலிருந்த தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் புகுந்து அங்கு மது அருந்திவிட்டு சந்தன மரங்களை வெட்டி எடுத்துச் செல்ல முயன்றனர்.

பயங்கர ஆயுதங்களுடன் உலா வரும் சந்தன மரம் கடத்தல் கும்பல்

அப்போது, அப்பகுதி இளைஞர்கள் அந்தக் கும்பலை விரட்டியடித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றும் கும்பலால் வெளியே செல்லவே அச்சப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறது.

பயங்கர ஆயுதங்களுடன் மரத்தை வெட்ட அந்தக் கும்பல் ஒரு வீட்டுக்கு முன்பு பதுங்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்த காவலருக்குச் சிறை!

Intro:கோவை சிங்கநல்லூர் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் உலா வந்த சந்தன மரம் கடத்தல் கும்பல், நான்கு நாட்களில் 3 வீடுகளில் இருந்த சந்தன் மரங்கள் வெட்டி கடத்தி சென்றனர்.
Body:கோவையில் முக்கிய பகுதிகளை குறி வைத்து சந்தன மரத்தை மர்ம கும்பல் கடத்தி வருகிறது. குறிப்பாக பந்தைய சாலை, சாய்பாபா காலணி, கோவைப்புதூர் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் வீட்டின் வாசலில் இருந்த சந்தன மரங்களை இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வரும் மர்ம கும்பல் வீட்டின் வெளியே பூட்டி விட்டு இயந்திரங்கள் மூலம் வெட்டி சந்தன மரங்களை கடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை சிங்காநல்லூர் நீலிகோணாம்பாளையம் பகுதியில் புகுந்த 15 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அப்பகுதியில் உலா வந்தனர். பின்னர் அருகே இருந்த தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் புகுந்து அங்கு மது அருத்தி விட்டு சந்தன மரங்களை வெட்டி எடுத்து செல்ல முயன்றுள்ளனர். இதையடுத்து அப்பகுதி இளைஞர்களை இரவு முழுவதும் அப்பகுதியில் சோதனையிட்டு மர்ம கும்பலை விரட்டியடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது தொடர்ந்து நான்கு நாட்களாக இப்பகுதியில் நோட்டமிடும் மர்ம கும்பல் தோட்டத்தை சுற்று உள்ள கம்பி வேலிகளை வெட்டி உள்ளனர். பின்னர் நேற்று அங்கு வந்து மது அருந்தி விட்டு, சந்தன மரங்களை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் வந்து அப்பகுதியில் வருவோரை மிரட்டி விட்டு இந்த திருட்டி ஈடுபடுவதாகவும், இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்லவே பொதுமக்கள் அச்சப்படுவதாக தெரிவித்தனர். இதனிடையே பயங்கர ஆயுதங்களுடன் மரத்தை வெட்ட அவர்கள் ஒரு வீட்டுக்கு முன்பு பதுங்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...

Conclusion:
Last Updated : Dec 6, 2019, 10:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.