ETV Bharat / state

வில்லுப்பாட்டை பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்- கலைஞர்கள் கோரிக்கை

author img

By

Published : May 11, 2019, 4:23 PM IST

கோவை: அழிந்து வரும் வில்லுப்பாட்டு கலையை பாதுகாக்க அரசு பள்ளி-கல்லூரிகளில் பாடத்திட்டமாக கொண்டுவரவேண்டும் என்று வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி வில்லுப்பாட்டு

பொள்ளாச்சியில் தமிழ் இசைச் சங்கத்தின் 48-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி சுப்பு ஆறுமுகத்தின் மகளான பாரதி திருமகள் குழுவினர் கலந்து கொண்டு, பாரதியாரின் பாடல்களை வில்லுப்பாட்டு இசையில் பாடினர். இது பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கச்சேரி முடிந்த பின்னர் பாரதி திருமகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "அரசியல், அறிவியல், விவசாயம், மருத்துவம் என எந்த ஒரு துறை சார்ந்த செய்தியை சொல்வதற்கும் வில்லுப்பாட்டை விட ஒரு சிறந்த எளிமையான வழி எதுவும் இருக்க முடியாது.

அழிந்து வரும் இந்த கலையை ஊக்குவிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு பாலமாக செயல்பட்டால் வில்லுப்பாட்டை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க முடியும். மேலும் தமிழ்நாடு அரசு பள்ளி கல்லூரிகளில் வில்லுப்பாட்டு கலையை ஒரு பாடமாகக் கொண்டு வந்தால், மக்கள் மறந்து வரும் இந்த கலையை வளர்த்துவிடலாம்." என அவர் தெரிவித்தார்.

வில்லுப்பாட்டை பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும்

பொள்ளாச்சியில் தமிழ் இசைச் சங்கத்தின் 48-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி சுப்பு ஆறுமுகத்தின் மகளான பாரதி திருமகள் குழுவினர் கலந்து கொண்டு, பாரதியாரின் பாடல்களை வில்லுப்பாட்டு இசையில் பாடினர். இது பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

கச்சேரி முடிந்த பின்னர் பாரதி திருமகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "அரசியல், அறிவியல், விவசாயம், மருத்துவம் என எந்த ஒரு துறை சார்ந்த செய்தியை சொல்வதற்கும் வில்லுப்பாட்டை விட ஒரு சிறந்த எளிமையான வழி எதுவும் இருக்க முடியாது.

அழிந்து வரும் இந்த கலையை ஊக்குவிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு பாலமாக செயல்பட்டால் வில்லுப்பாட்டை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க முடியும். மேலும் தமிழ்நாடு அரசு பள்ளி கல்லூரிகளில் வில்லுப்பாட்டு கலையை ஒரு பாடமாகக் கொண்டு வந்தால், மக்கள் மறந்து வரும் இந்த கலையை வளர்த்துவிடலாம்." என அவர் தெரிவித்தார்.

வில்லுப்பாட்டை பாடத்திட்டத்தில் கொண்டு வரவேண்டும்
அழிந்து வரும் வில்லுப்பாட்டு கலையை பாதுகாக்க அரசு பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டமாக கொண்டுவரவேண்டும் வில்லுப்பாட்டுக் கலைஞர்கள் கோரிக்கை
பொள்ளாச்சி : மே.11
பொள்ளாச்சி தமிழ் இசைச் சங்கத்தின் 48 ஆவது ஆண்டு ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலைமாமணி சுப்பு ஆறுமுகம் மகள் பாரதி திருமகள் குழுவினர் கலந்து கொண்டு பாரதி யுகம் வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சியை நடத்தினர் பாரதியாரின் பாடல்கள் உள்ளிட்ட பாடல்களை வில்லுப்பாட்டு இசையில் பாடியது பார்வையாளர்கள் கேட்டு உற்சாகம் அடைந்தனர் பின்னர் பாரதி திருமகள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது பள்ளிகளில் மோகம் கொண்டுள்ள கலைகள் அதிகமாக ஆர்ப்பாட்டம் செய்து வருகிறது டியூசனில் ஏங்கிக்கொண்டு உள்ள உலகம் confusion இல்லாத கலையைக் கொண்டு வர மறுப்பது ஏன் பள்ளி கல்லூரி பல்கலைக்கழகங்களில் வில்லுப்பாட்டு கலையை பாடமாகக் கொண்டு வந்தால் கலை வளர அஸ்திவாரமாக இருக்கும் எந்த செய்தியை சொல்வதற்கும் வில்லுப் பாட்டை விட சிறந்த வழி இருக்க முடியாது அறிவியல் விவசாயம் மருத்துவம் என எல்லாவற்றையும் இதன் மூலம் எளிமையாக சொல்ல முடியும் பள்ளிக்குழந்தைகள் ஆட்டமும் பாட்டமும் மட்டும்தான் கலை என்று நினைக்கிறார்கள் அழிந்து வரும் இந்த கலையை ஊக்குவிக்க நிறுவனங்கள் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒரு பாலமாக செயல்பட்டால் இந்த கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.