ETV Bharat / state

பொள்ளாச்சியில் வனத்துறையினரை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

author img

By

Published : May 26, 2019, 9:01 PM IST

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் புகுந்த காட்டு யானை தாக்கியத்தில் சிறுமி உள்பட இரண்டு பேர் பலியானதால் வனத்துறையினரை முற்றுகையிட்டு அம்மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் வனத்துறையினரை முற்றிகையிட்ட மலைவாழ் மக்கள்

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியில் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளமாக வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் ரஞ்சனாவை இரவு நேரத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் நேற்று இரவு குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை அதே பகுதியைச் சேர்ந்த மாகாளி என்ற 55 வயது முதியவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில், இன்று சம்பவ இடத்தைப் பார்வையிட்ட வந்த வனத்துறை அலுவலர்கள், காவல்துறையினரிடம் மலைவாழ் மக்கள் வழிமறித்து நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக எங்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உயிர் சேதத்தை ஏற்படுத்தும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர்.

பொள்ளாச்சியில் வனத்துறையினரை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியில் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளமாக வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் ரஞ்சனாவை இரவு நேரத்தில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார்.

அந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் நேற்று இரவு குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை அதே பகுதியைச் சேர்ந்த மாகாளி என்ற 55 வயது முதியவரை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில், இன்று சம்பவ இடத்தைப் பார்வையிட்ட வந்த வனத்துறை அலுவலர்கள், காவல்துறையினரிடம் மலைவாழ் மக்கள் வழிமறித்து நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக எங்களுக்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை எனவும் கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உயிர் சேதத்தை ஏற்படுத்தும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர்.

பொள்ளாச்சியில் வனத்துறையினரை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்
பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் யானை தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து மலைவாழ் மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

பொள்ளாச்சி மே 26

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியில் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர் இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ராஜன் என்ற வேட்டை தடுப்பு காவலரின்  மகள் ரஞ்சனா என்பவரை 24 நான்காம் தேதி இரவு காட்டு யானை தாக்கி உயிரிழந்தார் அந்த சோகத்தில் இருந்து மீளுவதற்குள்  நேற்று இரவு குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை அதே பகுதியைச் சேர்ந்த மாகாளி என்ற 55 வயது முதியவரை தாக்கியது இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

 இந்நிலையில் இன்று சம்பவ இடத்தைப் பார்க்க வந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் மலைவாழ் மக்கள் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்றும் பல ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இருப்பிடம் குடிநீர் மின்சாரம் உள்ளிட்ட எவ்வித வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர் மேலும் கடந்த மூன்று மாதங்களாக நவமலை பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்வதாக பலமுறை புகார் தெரிவித்தும் வனத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதோடு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் 

மலைவாழ் மக்கள் கோரிக்கைகளை கேட்க மறுத்து கூட்டத்திலிருந்து வெளியேறி சென்ற ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனரின் வாகனத்தை மறித்து அவரை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காட்டு யானையை விரட்ட டாப்சிலிப் பகுதியில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உயிர் சேதத்தை ஏற்படுத்தும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். மேலும் இரவு நேரங்களில் காட்டு யானை குடியிருப்புக்குள் வரும் அச்சம் உள்ளதால் அங்கு வசிக்கும் மலைவாழ் மக்களை இரவு நேரங்களில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு பகுதிக்கு இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளார். பேட்டி-1)நாச்சம்மாள் (மலைவாழ் மக்கள் ) 2) மாரிமுத்து ( ஆனைமலை காப்பகதுணை இயக்குநர்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.