ETV Bharat / state

தீபாவளி விடுமுறை: குரங்கு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பொள்ளாச்சி: குரங்கு நீர்வீழ்ச்சியில் தீபாவளி விடுமுறை தினங்களையொட்டி இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

author img

By

Published : Oct 29, 2019, 10:58 AM IST

monkey-falls

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி அருவிக்கு தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் தீபாவளியன்றும், மறுநாள் திங்கள்கிழமையன்றும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

இதனால் நீர்வீழ்ச்சியில் மக்கள் உற்சாகமாகக் குளியல் போட்டனர். மேலும் இந்தப் பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

குரங்கு அருவி

குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியில் வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனப்பகுதிக்குள் மது அருந்தக் கூடாது என்றும் அத்துமீறினால் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளியையொட்டி அதிகமான மக்கள் நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்புப் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தெலங்கானா நயகரா நீர்வீழ்ச்சியின் அழகான காட்சி!

பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சி அருவிக்கு தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழையின் காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்தனர். தற்போது மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் தீபாவளியன்றும், மறுநாள் திங்கள்கிழமையன்றும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

இதனால் நீர்வீழ்ச்சியில் மக்கள் உற்சாகமாகக் குளியல் போட்டனர். மேலும் இந்தப் பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.

குரங்கு அருவி

குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியில் வீசினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் வனப்பகுதிக்குள் மது அருந்தக் கூடாது என்றும் அத்துமீறினால் சுற்றுலாப் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளியையொட்டி அதிகமான மக்கள் நீர்வீழ்ச்சிக்கு வந்துள்ளதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்புப் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: தெலங்கானா நயகரா நீர்வீழ்ச்சியின் அழகான காட்சி!

Intro:fallsBody:fallsConclusion:பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் தீபாவளி அடுத்து இரண்டாவது நாளாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர் பொள்ளாச்சி 28 பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு நீர்வீழ்ச்சியில் நேற்று தீபாவளி முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர் இதை எடுத்து இரண்டாம் நாளாக குரங்கு நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர் மேலும் பாதுகாப்பு கம்பிகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை செய்தனர் மழைப்பொழிவு மழைப்பொழிவு இல்லாத காரணத்தினால் நேற்றும் இன்றும் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர் இதையடுத்து வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வால்பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வீசினால் அபராதம் விதிக்கப்படுகிறது வனப்பகுதிக்குள் மது அருந்தவோ அத்துமீறினால் சுற்றுலா பயணிகள் மீறக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.