ETV Bharat / state

ஆழியார் அணையிலிருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு - இரண்டாம் போகம் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

கோவை: பொள்ளாச்சி ஆழியார் அணையிலிருந்து 6400 ஏக்கர் நிலம் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

pollachi-aliyar-dam-openning
pollachi-aliyar-dam-openning
author img

By

Published : Jan 2, 2020, 9:20 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனம் மூலம் நெல், வாழை, தென்னை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன. இதில் நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு டிசம்பர் மாதம் அறுவடை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்ற ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்ததன் காரணமாக, ஆழியார் அணையில் நீர்மட்டம் நிரம்பிக் காணப்படுகிறது. இதையடுத்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையின்படி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழியாறு அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.

ஆழியார் அணை

அதன்படி நேற்று ஆழியாறு அணை மின் உற்பத்தி நிலையம் வழியாகப் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் கால்வாயில் வரும்போது, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, பொதுப்பணித் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர். நேற்றிலிருந்து தொடங்கி இன்னும் 106 நாள்களுக்கு திறந்துவிடப்படும் தண்ணீர், நாள் ஒன்றுக்கு 940 மில்லியன் கனஅடி வீதம் திறந்து விடப்படும் எனக் கூறப்படுகிறது.

இதன்மூலம் ஆனைமலை பகுதியிலுள்ள 6400 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளும் குளங்களும் நிரம்பிவருகின்றன.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் முறையாக சாகுபடி செய்து தண்ணீரைச் சிக்கனப்படுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

1,100 மில்லி தங்கத்தில் புத்தாண்டு கேக் - நகைத்தொழிலாளி சாதனை!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சுற்றுவட்டாரப் பகுதியில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனம் மூலம் நெல், வாழை, தென்னை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டுவருகின்றன. இதில் நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு டிசம்பர் மாதம் அறுவடை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்ற ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்ததன் காரணமாக, ஆழியார் அணையில் நீர்மட்டம் நிரம்பிக் காணப்படுகிறது. இதையடுத்து இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையின்படி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழியாறு அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார்.

ஆழியார் அணை

அதன்படி நேற்று ஆழியாறு அணை மின் உற்பத்தி நிலையம் வழியாகப் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் கால்வாயில் வரும்போது, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, பொதுப்பணித் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் மலர் தூவி வரவேற்றனர். நேற்றிலிருந்து தொடங்கி இன்னும் 106 நாள்களுக்கு திறந்துவிடப்படும் தண்ணீர், நாள் ஒன்றுக்கு 940 மில்லியன் கனஅடி வீதம் திறந்து விடப்படும் எனக் கூறப்படுகிறது.

இதன்மூலம் ஆனைமலை பகுதியிலுள்ள 6400 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், "தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளும் குளங்களும் நிரம்பிவருகின்றன.

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர் சந்திப்பு

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறந்து விடப்பட்ட தண்ணீரை விவசாயிகள் முறையாக சாகுபடி செய்து தண்ணீரைச் சிக்கனப்படுத்த வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

1,100 மில்லி தங்கத்தில் புத்தாண்டு கேக் - நகைத்தொழிலாளி சாதனை!

Intro:aliyar damBody:aliyar damConclusion:பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து 6400 ஏக்கர் பயன்பெறும் வகையில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு இரண்டாம் போகம் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பு- தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட விவசாயிகள் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்

பொள்ளாச்சி ஜன- 1

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசன மூலம் நெல், வாழை, தென்னை ஆகியவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் நெல் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் போக நெல் சாகுபடி செய்யப்பட்டு டிசம்பர் மாதம் அறுவடை செய்யப்பட்டது, இந்நிலையில் சென்ற ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் நல்ல மழை பெய்த காரணமாக ஆழியார் அணையில் நீர்மட்டம் நிரம்பிய காணப்படுகிறது, இந்நிலையில் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர், அந்த கோரிக்கையின்படி நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆழியாறு அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டார், அதன்படி இன்று ஆழியாறு அணை மின் உற்பத்தி நிலையம் வழியாக பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது, தண்ணீர் கால்வாயில் வரும்பொழுது தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர், இன்று திறந்து விடப்பட்ட தண்ணீர் ஏப்ரல் 15ஆம் தேதி வரை 106 நாட்களுக்கு 940 மில்லியன் கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது, இதன்மூலம் ஆனைமலை பகுதியில் உள்ள 6400 ஏக்கர் பாசனம் பெறும், இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தமிழகத்தில் சென்ற ஆண்டு பெய்த மழை காரணமாக அனைத்து அணைகளும் குளங்களும் நிரம்பி வழிகிறது, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உத்தரவுப்படி இந்து ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது, திறந்து விடப்பட்ட தண்ணீர் விவசாயிகள் முறையான சாகுபடி செய்து தண்ணீரை சிக்கனப்படுத்தும் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பேட்டி -பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.