ETV Bharat / state

பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் கார் திருடியவர் கைது!

author img

By

Published : Nov 18, 2019, 9:11 PM IST

கோவை: தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட கார்களைத் திருடிய பரமேஸ்வரனை சூலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.

கார் திருடியவர் கைது

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது ஆம்னி கார் திருடு போனதாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான காவல் துறையினர் காங்கேயம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆம்னி காரில் வந்து முன்னுக்குப் பின் முரணாக பேசிய மதுரையைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில், கார்களைத் திருடி அதனை பரமேஸ்வரன் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட கார்களை இவர் திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பரமேஸ்வரனை கைது செய்த சூலூர் காவல் துறையினர், அவரிடமிருந்து ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, வாழ்வில் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் தொடர்ந்து கார்களைத் திருடி வந்ததாகவும், சென்னையில் கார் மெக்கானிக் தொழில் கற்றுக்கொண்டு சிறிது, சிறிதாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக உயர் ரக கார்களைக் குறிவைத்து பரமேஸ்வரன் திருடி விற்பனை செய்து வந்ததாகவும், இதற்கு டிஜிஎம் என்ற சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன கருவியைக் கொண்டு இந்த தொழிலில் ஈடுபட்டதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் கார் திருடியவர் கைது!

இதற்கிடையே, பெங்களூரு சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நேரத்தில், பரமேஸ்வரன் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் வசமாக சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: கடனை அடைக்க ஏடிஎம்-மை உடைத்த இளைஞர்!

கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது ஆம்னி கார் திருடு போனதாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான காவல் துறையினர் காங்கேயம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆம்னி காரில் வந்து முன்னுக்குப் பின் முரணாக பேசிய மதுரையைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

இதில், கார்களைத் திருடி அதனை பரமேஸ்வரன் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட கார்களை இவர் திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பரமேஸ்வரனை கைது செய்த சூலூர் காவல் துறையினர், அவரிடமிருந்து ஆம்னி காரையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, வாழ்வில் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் தொடர்ந்து கார்களைத் திருடி வந்ததாகவும், சென்னையில் கார் மெக்கானிக் தொழில் கற்றுக்கொண்டு சிறிது, சிறிதாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக உயர் ரக கார்களைக் குறிவைத்து பரமேஸ்வரன் திருடி விற்பனை செய்து வந்ததாகவும், இதற்கு டிஜிஎம் என்ற சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன கருவியைக் கொண்டு இந்த தொழிலில் ஈடுபட்டதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் கார் திருடியவர் கைது!

இதற்கிடையே, பெங்களூரு சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நேரத்தில், பரமேஸ்வரன் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டு காவல் துறையினரிடம் வசமாக சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க: கடனை அடைக்க ஏடிஎம்-மை உடைத்த இளைஞர்!

Intro:பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடிய பிரபல கார் திருடன் பரமேஸ்வரனை சூலூர் காவல் துறையினர் கைது செய்தனர்.Body:கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது ஆம்னி கார் திருடு போனதாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சூலூர் காவல் ஆய்வாளர் தங்கராஜ் தலைமையிலான காவல் துறையினர் காங்கேயம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக ஆம்னி காரில் வந்து முன்னுக்கு பின் முரணாக பேசிய மதுரையை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் காரினை திருடி விற்பனை செய்த பிரபல கார் திருடன் என்பது தெரியவந்தது. மேலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 150 க்கும் மேற்பட்ட கார்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஆம்னி காரை பறிமுதல் செய்ததோடு பரமேஸ்வரனை கைது செய்த சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழ்வில் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் தொடர்ந்து கார்களை திருடி வந்ததாகவும், சென்னையில் கார் மெக்கானிக்கல் பற்றி கற்றுக்கொண்டு சிறிது, சிறிதாக கார் திருட்டிலும் பரமேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் கார் திருட்டில் ஈடுபட்டு வந்த பரமேஸ்வரன் பின்னர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் தனது கைவரிசையை காட்டியுள்ளார். குறிப்பாக உயர் ரக கார்களை குறிவைத்து பரமேஸ்வரன் திருடி விற்பனை செய்து வந்ததாகவும், இதற்கு டிஜிஎம் என்ற சுமார் 8 இலட்ச ரூபாய் மதிப்பிலான அதிநவீன கருவியை கொண்டு உயர்ரக கார்களை திருடியுள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் 118 கார்களை திருடியதாக பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டார். அப்போது அந்த அதிநவீன கருவியும் பெங்களூரு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூரு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பரமேஸ்வரன் சூலூரில் கார் திருட்டில் ஈடுபட்ட போது சூலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.