ETV Bharat / state

கல்குவாரியால் மக்கள் பாதிப்பு - மாவட்ட ஆட்சியரிடம் மனு! - கல்குவாரியால் மக்கள் பாதிப்பு

கோவை: போத்தனூர் அருகே உள்ள கல்குவாரியால் மக்கள் பாதிப்படைந்துள்ளதைத் தொடர்ந்து, அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

quarries
quarries
author img

By

Published : Dec 23, 2019, 3:25 PM IST

Updated : Dec 23, 2019, 3:31 PM IST

கோவை போத்தனூரில் உள்ள கல்குவாரியில் வெடி வைத்து எடுக்கப்படும் கற்கள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் கனரக வாகனங்கள் ஆகியவையால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதையடுத்து, அதன் உரிமத்தை ரத்து செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், "ஓராட்டு குப்பைக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆனந்த் என்பவரால் அல்ட்ரா டெக் என்னும் பெயரில் கல்குவாரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தக்கோரி பல மனுக்கள் அளித்தோம். அப்போது நிறுத்திவிட்டு தற்போது மீண்டும் வேலையை தொடங்கியுள்ளனர்.

குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மனு

இதனால் கிராமம் முழுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வைக்கப்படும் வெடிகளாலும் கனரக இயந்திரங்களாலும் பெரும் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டால் சுமார் 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. எனவே, அரசு இந்த குவாரியின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

கோவை போத்தனூரில் உள்ள கல்குவாரியில் வெடி வைத்து எடுக்கப்படும் கற்கள், அப்பகுதியில் செயல்பட்டு வரும் கனரக வாகனங்கள் ஆகியவையால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதையடுத்து, அதன் உரிமத்தை ரத்து செய்யக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், "ஓராட்டு குப்பைக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆனந்த் என்பவரால் அல்ட்ரா டெக் என்னும் பெயரில் கல்குவாரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தக்கோரி பல மனுக்கள் அளித்தோம். அப்போது நிறுத்திவிட்டு தற்போது மீண்டும் வேலையை தொடங்கியுள்ளனர்.

குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மனு

இதனால் கிராமம் முழுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலரும் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வைக்கப்படும் வெடிகளாலும் கனரக இயந்திரங்களாலும் பெரும் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டால் சுமார் 600க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே விவசாயம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சீர்குலைந்துள்ளது. எனவே, அரசு இந்த குவாரியின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

Intro:கோவை போத்தனூர் அருகே உள்ள கல்லுக்குழியால் மக்கள் பாதிப்பு. மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.Body:கோவை மாவட்டம் பகுதியை அடுத்துள்ள ஓரட்டுகுப்பை என்ற கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியின் உரிமத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி விவசாயிகள் மற்றும் போது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கல்குவாரியில் வெடி வைத்து எடுக்கப்படும் கற்கள் மற்றும் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கனரக வாகனங்களால் காற்று மாசுபாடு ஏற்பட்டு விவசாயம் மற்றும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள் ஒரட்டு குப்பை கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் ஆனந்த் என்பவரால் அல்ட்ரா டெக் என்னும் பெயரில் கல்குவாரி செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இதனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்த கோரி பல மனுக்கள் அளித்துள்ளதாகவும் அப்போது நிறுத்திவிட்டு தற்போது மீண்டும் வேலையை துவக்கி உள்ளனர் என்று கூறினார். இதனால் அந்த கிராமம் முழுவதும் காற்று மாசுபட்டு விவசாயம் செய்ய முடியாமலும் மக்கள் பலரும் சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அங்கு வைக்கப்படும் வெடிகளாலும் கனரக இயந்திரங்களாலும் பெரும் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார். வெடிகள் வைக்கும் போது அங்குள்ள ஓட்டு வீடுகளில் உள்ள ஓடுகள் போன்றவை பாதிக்கபடுகிறது என்று கூறினார். மேலும் காற்று மாசுபாட்டால் அங்கு சுமார் 600 க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு அதை அகற்றியதாக தெரிவித்தார். எனவே விவசாயமும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சீர்குலைந்து உள்ளதாக தெரிவித்தார்.

எனவே அரசு இந்த குவாரியின் உரிமத்தைப் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.Conclusion:
Last Updated : Dec 23, 2019, 3:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.