ETV Bharat / state

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Jun 28, 2022, 8:57 PM IST

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் விண்ணப்பத்திற்கான இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்..!
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்..!

கோயம்புத்தூர் லாலிரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2022 - 23ஆம் கல்வியாண்டில் இளமறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவையை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "2022 -23ஆம் கல்வியாண்டில் இளமறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை இன்று(ஜூன் 28) தொடங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் 2148 இடங்களும், 28 இணைப்பு கல்லூரிகளில் 2337 இடங்களும் உள்ளன. 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.

12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் 971 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே விண்ணப்பத்தில் விருப்ப பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய முடியும். ஒரே நபர் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மாணவர் சேர்க்கை தொடர்பான இதர விபரங்களுக்கு chttps://tnau.ac.in/ என்ற தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பார்த்துக்கொள்ளலாம். இது தவிர பிரத்யேக எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலைப் பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது 982 ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர். விரிவாக்கக் கல்வி இயக்கம், ஆராய்ச்சி மையம் எனப் பல இடங்களில் ஆசிரியர்கள் பணிகளில் இருக்கின்றனர். வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மாணவர் விகிதம் வேறுபாடு இருப்பது உண்மைதான் கடந்த 8 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இதைத் தற்போதைய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் வேளாண்மைப் பாடத்திட்டங்களுக்கான அட்மிசன் பணிகள் தொடங்கும். செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெறும் ரூ.7ஆயிரத்துக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதா? கோபத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு!

கோயம்புத்தூர் லாலிரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2022 - 23ஆம் கல்வியாண்டில் இளமறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவையை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "2022 -23ஆம் கல்வியாண்டில் இளமறிவியல் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை இன்று(ஜூன் 28) தொடங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 18 உறுப்பு கல்லூரிகளில் 2148 இடங்களும், 28 இணைப்பு கல்லூரிகளில் 2337 இடங்களும் உள்ளன. 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிரிவு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும்.

12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் 971 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே விண்ணப்பத்தில் விருப்ப பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்ய முடியும். ஒரே நபர் ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மாணவர் சேர்க்கை தொடர்பான இதர விபரங்களுக்கு chttps://tnau.ac.in/ என்ற தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பார்த்துக்கொள்ளலாம். இது தவிர பிரத்யேக எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலைப் பாடப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது 982 ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர். விரிவாக்கக் கல்வி இயக்கம், ஆராய்ச்சி மையம் எனப் பல இடங்களில் ஆசிரியர்கள் பணிகளில் இருக்கின்றனர். வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மாணவர் விகிதம் வேறுபாடு இருப்பது உண்மைதான் கடந்த 8 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை.

இதைத் தற்போதைய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன் வேளாண்மைப் பாடத்திட்டங்களுக்கான அட்மிசன் பணிகள் தொடங்கும். செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வெறும் ரூ.7ஆயிரத்துக்கு ஆசிரியர்களை நியமனம் செய்வதா? கோபத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.