ETV Bharat / state

பவானியாற்றின் நீர்த்தேக்கத்தில் முதலை வேட்டை: ஒருவர் கைது, மற்றொருவர் தப்பியோட்டம்!

கோவை: பவானியாற்றின் நீர்த்தேக்கத்தில் முதலயை வேட்டையாடிய இருவரில், ஒருவரை கைது செய்துள்ள வனத்துறையினர், தப்பியோடிய மற்றொருவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

author img

By

Published : Feb 11, 2020, 7:26 PM IST

one person arrested in Coimbatore for hunt crocodile  கோவையில் முதலை வேட்டை  பவனியாற்றில் முதலை வேட்டை
முதலையை வேட்டையாடியவர் கைது

கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட தட்டப்பள்ளம் என்னுமிடத்தில் பவானியாற்றின் நீர்த்தேக்கத்தில் பிடிபட்ட முதலையைக் கொன்று அதன் இறைச்சி மற்றும் தோலைச் சிலர் பதப்படுத்தி வருவதாக சிறுமுகை வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், சிறிய முதலை ஒன்றினை கொன்று அதன் இறைச்சி மற்றும் தோலை தனித்தனியேப் பிரித்து இருவர் கடத்திச் செல்வதைக் கண்டனர்.

உடனடியாக அவர்களைப் பிடிக்க முயன்றபோது, அதில் ஒருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட மற்றொரு நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ராஜன் என்கிற பழனிசாமி(50) என்றும் தப்பியோடியவரின் பெயர் மாரியப்பன் என்றும் தெரியவந்தது. மேலும், தாங்கள் மீன்பிடிக்க விரித்த வலையில் குட்டி முதலையொன்று சிக்கிக் கொண்டதாகவும், அதனைக்கொன்று இறைச்சியை உண்டுவிட்டு தோலை விற்கலாம் எனத் திட்டமிட்டதாகவும் பிடிபட்டவர் கூறியதாகத் தெரிகிறது.

முதலையை வேட்டையாடியவர் கைது

இதனையடுத்து ராஜன் என்கிற பழனிசாமியை கைது செய்த சிறுமுகை வனத்துறையினர், அவரிடமிருந்த முதலமையின் உடல் பாகங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மாரியப்பனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணையின் பின்புற நீர்த்தேக்கங்கள் மற்றும் பவானியாற்றின் வனம் சார்ந்த கரையோரங்களில் முதலைகள் காணப்படுவதாகவும் இவற்றை சட்ட விரோதமாக வேட்டையாட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: மஸ்து பிடித்த காட்டு யானை - தண்டு வீசிய வனத்துறையினர்!

கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட தட்டப்பள்ளம் என்னுமிடத்தில் பவானியாற்றின் நீர்த்தேக்கத்தில் பிடிபட்ட முதலையைக் கொன்று அதன் இறைச்சி மற்றும் தோலைச் சிலர் பதப்படுத்தி வருவதாக சிறுமுகை வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், சிறிய முதலை ஒன்றினை கொன்று அதன் இறைச்சி மற்றும் தோலை தனித்தனியேப் பிரித்து இருவர் கடத்திச் செல்வதைக் கண்டனர்.

உடனடியாக அவர்களைப் பிடிக்க முயன்றபோது, அதில் ஒருவர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட மற்றொரு நபரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் ராஜன் என்கிற பழனிசாமி(50) என்றும் தப்பியோடியவரின் பெயர் மாரியப்பன் என்றும் தெரியவந்தது. மேலும், தாங்கள் மீன்பிடிக்க விரித்த வலையில் குட்டி முதலையொன்று சிக்கிக் கொண்டதாகவும், அதனைக்கொன்று இறைச்சியை உண்டுவிட்டு தோலை விற்கலாம் எனத் திட்டமிட்டதாகவும் பிடிபட்டவர் கூறியதாகத் தெரிகிறது.

முதலையை வேட்டையாடியவர் கைது

இதனையடுத்து ராஜன் என்கிற பழனிசாமியை கைது செய்த சிறுமுகை வனத்துறையினர், அவரிடமிருந்த முதலமையின் உடல் பாகங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மாரியப்பனை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் அணையின் பின்புற நீர்த்தேக்கங்கள் மற்றும் பவானியாற்றின் வனம் சார்ந்த கரையோரங்களில் முதலைகள் காணப்படுவதாகவும் இவற்றை சட்ட விரோதமாக வேட்டையாட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: மஸ்து பிடித்த காட்டு யானை - தண்டு வீசிய வனத்துறையினர்!

Intro:கோவை அருகே முதலையை வேட்டையாடி கொன்றவர் கைது, முதலையின் இறைச்சி மற்றும் தோலை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை. Body:கோவை மாவட்டம், சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட தட்டப்பள்ளம் என்னுமிடத்தில் பவானியாற்றின் நீர்த்தேக்கத்தில் பிடிபட்ட முதலையை கொன்று அதன் இறைச்சி மற்றும் தோலை சிலர் பதப்படுத்தி வருவதாக சிறுமுகை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் சிறிய முதலை ஒன்றினை கொன்று அதன் இறைச்சி மற்றும் தோலை தனித்தனியே பிரித்து இருவர் கடத்தி செல்வதை கண்டனர். உடனடியாக அவர்களை பிடிக்க முயன்ற போது முதலையுடன் ஓட முயன்ற ஒருவர் பிடிபட மற்றொரு நபர் தப்பியோடிவிட்டார். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ராஜன் என்கிற பழனிசாமி (50) என்றும் தப்பியோடியவர் பெயர் மாரியப்பன் என்றும் தெரிய வந்தது. மேலும், தாங்கள் மீன் பிடிக்க விரித்த வலையில் குட்டி முதலையொன்று சிக்கி கொண்டதாகவும், அதனை கொன்று இறைச்சியை உண்டுவிட்டு தோலை விற்கலாம் என திட்டமிட்டதாகவும் பிடிபட்டவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து ராஜன் என்கிற பழனிசாமியை கைது செய்த சிறுமுகை வனத்துறையினர் அவரிடமிருந்த முதலையின் உடல் பாகங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய மாரியப்பனை தேடி வருகின்றனர். சிறுமுகை வனச்சரகதிற்கு உட்பட்ட பவானிசாகர் அணையின் பின்புற நீர்தேக்கங்கள் மற்றும் பவானியாற்றின் வனம் சார்ந்த கரையோரங்களில் முதலைகள் காணப்படுவதாகவும் இவற்றை சட்ட விரோதமாக வேட்டையாட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.