ETV Bharat / state

மூதாட்டியை கொன்ற மர்ம கும்பல், கொலையாளிக்கு போலீஸ் வலைவீச்சு!

author img

By

Published : Dec 4, 2019, 2:12 PM IST

கோயம்புத்தூர்: கோவில்பாளையம் அருகே மூதாட்டியை அரிவாளால் வெட்டிச் சென்ற கும்பல், கொலை செய்யவந்தார்களா அல்லது கொள்ளையடிக்க வந்தார்களா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

old lady killed in coimbatore
குற்றவாளிகள் விட்டுச்சென்ற அரிவாள்

கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் ராதாமணி(65). இவர், வீட்டில் நேற்றிரவு தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராதாமணியை அரிவாளால் வெட்டிவிட்டு, அரிவாளை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலை ராதாமணி வெட்டுப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு, வீட்டை சோதனை செய்ததில் அந்த கும்பல் விட்டுச்சென்ற அரிவாளை காவல் துறையினர் கண்டெடுத்தனர். மேலும், வீட்டின் பீரோவும் திறந்துள்ளதையும் கண்டனர். இதனை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டி தனியாக வசித்து வருவதால், அவரிடம் கொள்ளையடிக்க அந்த கும்பல் வந்ததா, அல்லது கொலை செய்ய வந்ததா, எதற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு; ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோயம்புத்தூர் மாவட்டம் கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் ராதாமணி(65). இவர், வீட்டில் நேற்றிரவு தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் ராதாமணியை அரிவாளால் வெட்டிவிட்டு, அரிவாளை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலை ராதாமணி வெட்டுப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்பு, இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பாளையம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு, வீட்டை சோதனை செய்ததில் அந்த கும்பல் விட்டுச்சென்ற அரிவாளை காவல் துறையினர் கண்டெடுத்தனர். மேலும், வீட்டின் பீரோவும் திறந்துள்ளதையும் கண்டனர். இதனை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டி தனியாக வசித்து வருவதால், அவரிடம் கொள்ளையடிக்க அந்த கும்பல் வந்ததா, அல்லது கொலை செய்ய வந்ததா, எதற்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டார் என பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு; ரவுடி கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

Intro:கோவை கோவில் பாளையத்தில் மூதாட்டி கொலைBody:கோவை கோவில் பாளையத்தை சேர்ந்த ராதாமணி(65) என்பவர் வீட்டில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ராதாமணியை அரிவாளால் வெட்டிவிட்டு அரிவாளை அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். இன்று காலை அப்பகுதி மக்கள் ராதாமணி வெட்டபட்டு இறந்த நிலையில் இருபதை கண்டு கோவில் பாளையம் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனை அடுத்து வந்த காவலர்கள் அரிவாளை பறிமுதல் செய்தனர். அவர் வீட்டில் பீரோ திறந்துள்ளதையும் கண்டனர்.

போலீஸார் விசாரணையில் அவர் தனியாக வசித்து வந்தது தெரியவந்தது. ஆனால் கும்பல் எதற்காக கொலை செய்தது, பீரோவில் இருந்து நகைகள் பணம் எடுத்து அக்கும்பல் சென்றுள்ளதா அந்த கும்பல் கொலை கும்பலா கொள்ளை கும்பலா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவில் மூதாட்டி ஒருவர் அரிவாளால் கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.