ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: இஸ்லாமிய மக்கள் பேரணி - குடியுரிமை திருத்தச் சட்டம்

கோயம்புத்தூர்: மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
பேரணியில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
author img

By

Published : Feb 2, 2020, 11:14 PM IST

கோயம்புத்தூரில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கண்டிக்கக் கோரியும் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக கண்டனப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியானது உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி, அரசு கலைக்கல்லூரி வழியாகச் சென்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு, வேண்டாம் வேண்டாம் சிஏஏ, ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தடுத்து நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மக்கள் கலந்துகொண்டனர்.

இஸ்லாமியர்கள் பேரணி

பேரணியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், சிறப்பு படை காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்தப் பேரணியானது முடியும் வரை அந்த சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டதிற்கு எதிராக கையெழுத்து இயக்கம்

கோயம்புத்தூரில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரியும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கண்டிக்கக் கோரியும் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக கண்டனப் பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணியானது உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி, அரசு கலைக்கல்லூரி வழியாகச் சென்று தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறு, வேண்டாம் வேண்டாம் சிஏஏ, ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தடுத்து நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மக்கள் கலந்துகொண்டனர்.

இஸ்லாமியர்கள் பேரணி

பேரணியில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், சிறப்பு படை காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்தப் பேரணியானது முடியும் வரை அந்த சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டதிற்கு எதிராக கையெழுத்து இயக்கம்

Intro:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கண்டனப் பேரணி


Body:மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரியும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கண்டிக்க கோரியும் அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் சார்பாக கண்டன பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த கண்டனம் பேரணியானது உக்கடம் பேருந்து நிலையத்தில் தொடங்கி திருச்சி சாலை மேம்பாலத்தில் ஏறி அரசு கலைக்கல்லூரி வழியாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். இந்த பேரணியில் கோவை மேட்டுப்பாளையம் திருப்பூர் பொள்ளாச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது என்று ஐந்து மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் சிறப்பு படை காவல் துறையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டனர். அந்த பேரணி அவனது தொடங்கி முடியும் வரை அந்த சாலைகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன காவலர்கள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பேரணியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெறு, வேண்டாம் வேண்டாம் சிஏஏ , ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை தடுத்து நிறுத்து போன்ற வாசகங்கள் அடங்கிய பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியவாறு மக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

மேலும் பேரணியில் மக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவிட ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டிருந்தது மேலும் அனைத்து மக்களுக்கும் வழியிலேயே குடிநீர் போன்றவைகளும் வழங்கப்பட்டன.




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.