ETV Bharat / state

'பழுதடைந்த தொகுப்பு வீடுகள் சீரமைத்துத் தரப்படும்'- பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம்! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோயம்புத்தூர் : பொள்ளாச்சியில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் உறுதியளித்துள்ளார்.

வீடுகளை பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம்
author img

By

Published : Nov 3, 2019, 5:28 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாளக்கரை கிராமத்தில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் காலனி உள்ளது. இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து, மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த வீடுகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி மக்களிடம் பழுதடைந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

வீடுகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் சிதிலமடைந்துள்ளதால், குடியிருக்க முடியாத நிலையில் மக்கள் வசிப்பதாகவும்; இப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலை - பொதுமக்கள் அவதி!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தாளக்கரை கிராமத்தில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் காலனி உள்ளது. இங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து, மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த வீடுகளை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அப்பகுதி மக்களிடம் பழுதடைந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

வீடுகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் சிதிலமடைந்துள்ளதால், குடியிருக்க முடியாத நிலையில் மக்கள் வசிப்பதாகவும்; இப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : பழுதடைந்த தேசிய நெடுஞ்சாலை - பொதுமக்கள் அவதி!

Intro:mpBody:mpConclusion:பொள்ளாச்சியில் பழுதடைந்த தொகுப்பு வீடுகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உறுதி.
பொள்ளாச்சி : நவ : 2
பொள்ளாச்சி அருகே உள்ள நல்லிக்கவுண்டன் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட தாளக் கரை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் கட்டித் தரப்பட்ட தொடுப்பு வீடுகள் பழுதடைந்து மேற்கூரைகள் பெயர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது இந்த வீடுகளை இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது அப்பகுதி மக்களிடம் பழுதடைந்த வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் வீடுகள் கட்டப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியும் சிதலமடைந்துள்ளதால் குடியிருக்க முடியாத நிலையில் மக்கள் வசிக்கிறார்கள் இப்பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார் பழுதடைந்த தொடுப்பு வீடுகளை அரசின் நிதி உதவி பெற்று புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.