ETV Bharat / state

பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த தாய், மகள்

author img

By

Published : Aug 27, 2022, 9:22 PM IST

கோயம்புத்தூரில் வீட்டு வேலை செய்துகொண்டு பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்து வரும் தாய், மகள் குறித்த சிறிய தொகுப்பை காணலாம்...

r பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த தாய், மகள்
r பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த தாய், மகள்

கோயம்புத்தூர்: குனியமுத்தூர் ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மாசிலாமணி. ரமேஷ் திருமணங்களுக்கு அலங்காரம் செய்யும் பணி செய்து வருகிறார். மாசிலாமணி அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது. மூத்த மகளக்கு திருமணமான நிலையில் இளைய மகள் தாரணி இருக்கிறார்.

தாரணி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் மாசிலாமணிக்கு பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக பணி முடிந்ததும் அருகிலுள்ள உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் சிவக்குமாரிடம் பளுதூக்கும் பயிற்சி பெற்று வந்தார். இதை பார்த்த அவரது மகள் தாரணிக்கும் தாய் போல் பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நாள்தோறும் பயிற்சி பெற்று வந்தனர்.

பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த தாய், மகள்
பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த தாய், மகள்

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் திருச்சியில் நடந்த மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கம் வென்று மாசிலாமணி சாதனை படைத்தார். மேலும் அவருடைய 17 வயது மகள் தாரணி 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார். இது குறித்து மாசிலாமணி கூறுகையில், “நான் வீட்டு வேலைக்குச் சென்று வந்த நிலையில் தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் பழுதுதூக்கும் போட்டியை பார்த்து ஆர்வம் ஏற்பட்டது.

அதன் காரணமாக பயிற்சியாளர் மூலம் பயிற்சிப் பெற்று வந்தேன். ஆரம்பத்தில் என்னுடைய உடல் பருமனை பார்த்து பலரும் கேலி செய்த நிலையில் அதை பற்றி கவலைப்படாமல் உடற்பயிற்சியை செய்து வந்தேன். இதை பார்த்த எனது மகளும் இதில் ஆர்வம் கொண்டு என்னுடன் பயிற்சி பெற்றார். தற்போது மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த கட்டமாக தென்னிந்திய அளவில் நடைபெறும் பளுதூக்கும் போட்டியில் இருவரும் கலந்து கொள்ள உள்ளோம்.

அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். வீட்டு வேலைக்குச் செல்லும் நான், போதிய புரத சத்துள்ள உணவுகளை சாப்பிட முடியாமல் வீட்டில் சமைக்கும் உணவுகளை மட்டும் சாப்பிட்டு வருகிறோம். எங்களுக்கு அரசு உதவினால் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: போட்டித்தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியான பெண் காவலர்...

கோயம்புத்தூர்: குனியமுத்தூர் ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மாசிலாமணி. ரமேஷ் திருமணங்களுக்கு அலங்காரம் செய்யும் பணி செய்து வருகிறார். மாசிலாமணி அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது. மூத்த மகளக்கு திருமணமான நிலையில் இளைய மகள் தாரணி இருக்கிறார்.

தாரணி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் மாசிலாமணிக்கு பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக பணி முடிந்ததும் அருகிலுள்ள உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் சிவக்குமாரிடம் பளுதூக்கும் பயிற்சி பெற்று வந்தார். இதை பார்த்த அவரது மகள் தாரணிக்கும் தாய் போல் பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நாள்தோறும் பயிற்சி பெற்று வந்தனர்.

பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த தாய், மகள்
பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்த தாய், மகள்

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் திருச்சியில் நடந்த மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கம் வென்று மாசிலாமணி சாதனை படைத்தார். மேலும் அவருடைய 17 வயது மகள் தாரணி 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார். இது குறித்து மாசிலாமணி கூறுகையில், “நான் வீட்டு வேலைக்குச் சென்று வந்த நிலையில் தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் பழுதுதூக்கும் போட்டியை பார்த்து ஆர்வம் ஏற்பட்டது.

அதன் காரணமாக பயிற்சியாளர் மூலம் பயிற்சிப் பெற்று வந்தேன். ஆரம்பத்தில் என்னுடைய உடல் பருமனை பார்த்து பலரும் கேலி செய்த நிலையில் அதை பற்றி கவலைப்படாமல் உடற்பயிற்சியை செய்து வந்தேன். இதை பார்த்த எனது மகளும் இதில் ஆர்வம் கொண்டு என்னுடன் பயிற்சி பெற்றார். தற்போது மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த கட்டமாக தென்னிந்திய அளவில் நடைபெறும் பளுதூக்கும் போட்டியில் இருவரும் கலந்து கொள்ள உள்ளோம்.

அதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம். வீட்டு வேலைக்குச் செல்லும் நான், போதிய புரத சத்துள்ள உணவுகளை சாப்பிட முடியாமல் வீட்டில் சமைக்கும் உணவுகளை மட்டும் சாப்பிட்டு வருகிறோம். எங்களுக்கு அரசு உதவினால் அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற முடியும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: போட்டித்தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியான பெண் காவலர்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.