ETV Bharat / state

கால்நடை மருத்துவம் படிக்க மாணவர்கள் ஆர்வம் - அமைச்சர் ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Jul 25, 2020, 7:54 PM IST

கோயம்புத்தூர்: பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தலைவாசல் பகுதியில் தொடங்கவுள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அதிக விருப்பம் காட்டி வருவதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

minister
minister

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உலக மென்பொருள் சந்தை தளத்தில், தண்டோரா என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மென்பொருளை கால்நாடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் இந்த நிறுவனத்தில் பணிபுரியம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஆணையை அமைச்சர் வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. உடுமலை பூக்களம் பகுதியில் 30 கோடி ரூபாயில் 320 குடியிருப்புகள் கட்டும் பணி முடிவடைந்தது. பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தொடங்கியிருக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் முடித்த மாணவர்கள் தேர்வு சேர்வதற்கு அதிக அளவில் விருப்பம் காட்டி வருகின்றனர். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்று 82ஆவது பிறந்தநாள்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உலக மென்பொருள் சந்தை தளத்தில், தண்டோரா என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மென்பொருளை கால்நாடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் இந்த நிறுவனத்தில் பணிபுரியம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஆணையை அமைச்சர் வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. உடுமலை பூக்களம் பகுதியில் 30 கோடி ரூபாயில் 320 குடியிருப்புகள் கட்டும் பணி முடிவடைந்தது. பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

குறிப்பாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தொடங்கியிருக்கும் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு பன்னிரெண்டாம் முடித்த மாணவர்கள் தேர்வு சேர்வதற்கு அதிக அளவில் விருப்பம் காட்டி வருகின்றனர். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்று 82ஆவது பிறந்தநாள்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.