ETV Bharat / state

வால்பாறை சாலையில் வாக்கிங் சென்ற சிறுத்தை - வைரல் வீடியோ - சாலையில் நடந்து சென்ற சிறுத்தை

கோவை: பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் சிறுத்தை நடந்து செல்லும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

leopard
author img

By

Published : Jul 12, 2019, 7:27 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி வால்பாறை. மொத்தம் 48 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டு மாடு, வரையாடு உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இதனால் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பயணிக்கும் போது வாகனத்தை நிறுத்தக் கூடாது என சுற்றுலாப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை இரண்டு சுற்றுலாப் பயணிகள் அட்டக்கட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றுள்ளது. பின் வாகனத்தில் வருபவர்களை கண்ட சிறுத்தை, மீண்டும் வனப்பகுதியில் சென்றது.

சாலையில் வாக்கிங் சென்ற சிறுத்தையின் வீடியோ

இதை செல்போனில் வீடியோவாக எடுத்த வாகன ஓட்டி ஒருவர், அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சமீபகாலமாக வனவிலங்குள் காட்டில் இருந்து சாலை, வீடு இருக்கும் பகுதிகளுக்கு வருவது அதிமாகி வருவதால், இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி வால்பாறை. மொத்தம் 48 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டு மாடு, வரையாடு உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இதனால் வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பயணிக்கும் போது வாகனத்தை நிறுத்தக் கூடாது என சுற்றுலாப்பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை இரண்டு சுற்றுலாப் பயணிகள் அட்டக்கட்டி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்த சிறுத்தை ஒன்று சாலையில் நடந்து சென்றுள்ளது. பின் வாகனத்தில் வருபவர்களை கண்ட சிறுத்தை, மீண்டும் வனப்பகுதியில் சென்றது.

சாலையில் வாக்கிங் சென்ற சிறுத்தையின் வீடியோ

இதை செல்போனில் வீடியோவாக எடுத்த வாகன ஓட்டி ஒருவர், அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சமீபகாலமாக வனவிலங்குள் காட்டில் இருந்து சாலை, வீடு இருக்கும் பகுதிகளுக்கு வருவது அதிமாகி வருவதால், இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

Intro:Valpari roadBody:ValpariroadConclusion:பொள்ளாச்சி வால்பாறை சாலையில் நடந்து செல்லும்சிறுத்தை ,வாட்ஸ் ஆப்பில் பரவி வரும் சிறுத்தை வீடியோ. .பொள்ளாச்சி- 12 பொள்ளாச்சி வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாகும், வால்பாறை செல்ல 48 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டு மாடு, வரையாடு, என விலங்குகள் உள்ளன. ஆழியார் வனத்துறை சாவடிகடக்கும் முன் வனத்துறையினர் இரு சக்கரம், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை வனப்பகுதியெட்டி நிறுத்த வே, மது அருந்த வே கூடாது என எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது, இந்நிலையில் இன்று காலை அட்ட கட்டி செல்லுமுன் இருசக்கர வாகனத்தில் சுற்றுலாசென்றவர்கள் வனப்பகுதியை விட்டு வெளியே சாலையில் சிறுத்தை நடந்து சென்று கொண்டு இருப்பதும் பின் சுற்றுலா பயணிகளை கண்டு ஒடியா சிறுத்தை வனப்பகுதியில் சென்று மறைந்தது, இதை செல்போனில் சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்தது வாட்ஸ் ஆப்பில் பரவி வருவது குறிப்பிடதக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.