ETV Bharat / state

பஞ்சாயத்து செயல் அலுவலர் மீது சட்டக் கல்லூரி மாணவர் பரபரப்பு புகார்! - கோவை மாவட்ட எஸ்.பியிடம் புகார்

கோவை: தனியார் வாகன ஓட்டுநர் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்ட சட்ட மாணவருக்கு பேரூராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் பேட்டி
author img

By

Published : Nov 8, 2019, 11:56 PM IST

Updated : Nov 9, 2019, 9:01 PM IST

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள துப்புரவு வாகனம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் பழுதடைந்துள்ள நிலையில், பேரூராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தை வாங்கி இயக்கி வருகிறது.

இந்த ஒப்பந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் மணிகண்டன், வாகனத்தைச் சரிவர இயக்காமல், டீசல் போன்றவற்றை கையாடல் செய்வதாக அதேப் பகுதியைச் சேர்ந்த சட்டம் பயிலும் மாணவர் ரமேஷூக்குத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில் ரமேஷ் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார். ஆனால், அவர் அளித்த மனுவிற்கு எந்த பதிலும் வராத நிலையில், கடந்த 25ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பேரூராட்சி செயல் அலுவலருக்கு, துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் வாகனத்தின் ஒப்பந்த நகல், குத்தகை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவர் பேட்டி

செயல் அலுவலரிடம் இருந்து பதில் வரும் என நினைத்திருந்த ரமேஷூக்கு, அதிர்ச்சி தான் காத்திருந்தது. அரசு அலுவலரிடம் இருந்து பதில் வருவதற்குப் பதில், யார் குறித்து விளக்கம் கேட்டாரோ அவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த தனியார் வாகன ஓட்டுநர் ரமேஷின் தந்தையையும் மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் ரமேஷ், தான் அளித்த மனு மீதான தகவல்களை கசியவிட்ட செயல் அலுவலர் மற்றும் தனியார் வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:ஒரே கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மாவட்ட நீதிபதியாகத் தேர்வு!

கோவை மாவட்டம், மதுக்கரை வட்டம், திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள துப்புரவு வாகனம் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் பழுதடைந்துள்ள நிலையில், பேரூராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் வாகனத்தை வாங்கி இயக்கி வருகிறது.

இந்த ஒப்பந்த வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் மணிகண்டன், வாகனத்தைச் சரிவர இயக்காமல், டீசல் போன்றவற்றை கையாடல் செய்வதாக அதேப் பகுதியைச் சேர்ந்த சட்டம் பயிலும் மாணவர் ரமேஷூக்குத் தகவல் கிடைத்தது.

இந்நிலையில் ரமேஷ் முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளார். ஆனால், அவர் அளித்த மனுவிற்கு எந்த பதிலும் வராத நிலையில், கடந்த 25ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பேரூராட்சி செயல் அலுவலருக்கு, துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் வாகனத்தின் ஒப்பந்த நகல், குத்தகை விவரம் உள்ளிட்டவை குறித்து கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

சட்டக் கல்லூரி மாணவர் பேட்டி

செயல் அலுவலரிடம் இருந்து பதில் வரும் என நினைத்திருந்த ரமேஷூக்கு, அதிர்ச்சி தான் காத்திருந்தது. அரசு அலுவலரிடம் இருந்து பதில் வருவதற்குப் பதில், யார் குறித்து விளக்கம் கேட்டாரோ அவரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த தனியார் வாகன ஓட்டுநர் ரமேஷின் தந்தையையும் மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் ரமேஷ், தான் அளித்த மனு மீதான தகவல்களை கசியவிட்ட செயல் அலுவலர் மற்றும் தனியார் வாகன ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

இதையும் படிங்க:ஒரே கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மாவட்ட நீதிபதியாகத் தேர்வு!

Intro:தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டதற்கு தற்காலிக ஓட்டுனர் மூலம் கொலை மிரட்டல் விடுத்த அரசு அதிகாரி.Body:தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டதற்கு ஓட்டுனர் மூலம் கொலை மிரட்டல் விடுத்த அரசு அதிகாரி.



திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு தகவலை வேண்டி கேட்டதற்கு தற்காலிக ஓட்டுனர் மூலமாக கொலை மிரட்டல் விடுத்ததை கண்டித்து கோவை மாநகர காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார் சட்டவியல் படிக்கும் மாணவர் ரமேஷ்.

கோவை மதுக்கரை வட்டம் திருமலையாம்பாளையத்தில் வசித்து வரும் ரமேஷ்(30) சட்டவியல் படித்து வருகிறார். அப்பகுதியில் 3 லட்சம் மதிப்புள்ள துப்புரவு வாகனம் சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டது. ஆனால் அது கடந்த 2 ஆண்டுகளாக பழுதடைந்து இயக்கப்படாத நிலையில் உள்ளது. இந்நிலையில் தனியார் வாகனம் லீஸுக்கு எடுத்து இயங்கி வந்ததுள்ளது அவ்வாகனத்தை இயக்கும் ஓட்டுனர் மணிகண்டன் சரிவர இயக்காமலும் வாகனத்திற்கு டீசல் போன்ற செலவுகளை பஞ்சாயத்திடமிருந்து பெற்றுகொள்வதாகவும் ரமேஷிற்கு தகவல் வந்த நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மனு அளித்துள்ளார். ஆனால் ஒரு பதிலும் வராத நிலையில் கடந்த 25ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் மற்றும் செயல் அலுவலர் அவர்களுக்கு
அந்த தனியார் வாகனதிற்கான ஒப்பந்த நகல், விலை குறித்த நகல், போன்றவற்றை கேட்டு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இவரின் கேள்விகள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்காமல் அந்த தனியார் வாகன ஓட்டுனரிடருந்து இவருக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் இன்று காலை இவர் வீட்டிற்கே வந்து இவர் தந்தை ரங்கநாதன் (60) அவர்களையும் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதை அறிந்த ரமேஷ் தகவலை கேட்டது எவ்வாறு சம்மந்த பட்ட நபர்களுக்கு சென்றது என்றும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்கள் கேட்டு வரும் கோப்புகள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் கூறினார். மேலும் தகவல்களை கசிய விட்ட அரசு அதிகாரியின் மீதும் திருமலையாம்பாளையம் செயல் அலுவலர் பிலிக்ஸின் மீதும் தற்காலிக ஓட்டுனர் மணிகண்டன் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.Conclusion:
Last Updated : Nov 9, 2019, 9:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.