ETV Bharat / state

காவலருக்கு கரோனா தொற்று - குனியமுத்தூர் காவல்நிலையம் மூடப்பட்டது

author img

By

Published : Apr 25, 2020, 2:38 PM IST

கோயம்புத்தூர்: குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அவர் பணிபுரிந்த காவல்நிலையம் மூடப்பட்டது.

குனியமுத்தூர் காவல்நிலையம் மூடப்பட்டது
குனியமுத்தூர் காவல்நிலையம் மூடப்பட்டது

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறையினர் மட்டும் வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பணியில் இருக்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டது.

குனியமுத்தூர் காவல்நிலையம் மூடப்பட்டது

அதைத் தொடர்ந்து கோவையில் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் காவலர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, கோவையில் முதலில் அன்னூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலருக்கு வைரஸ் தொற்று இருந்ததால் அன்னூர் காவல் நிலையம் மூடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக போத்தனூர் காவல் நிலையமும் மூடப்பட்டது.

இதையடுத்து, நேற்று (ஏப்ரல் 24) குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று குனியமுத்தூர் காவல் நிலையமும் மூடப்பட்டது. அதற்கு பதிலாக குனியமுத்தூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்த குணமடைந்தவர்!

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறையினர், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஊடகத்துறையினர் மட்டும் வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே பணியில் இருக்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய அரசு உத்தரவிட்டது.

குனியமுத்தூர் காவல்நிலையம் மூடப்பட்டது

அதைத் தொடர்ந்து கோவையில் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் காவலர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, கோவையில் முதலில் அன்னூர் காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலருக்கு வைரஸ் தொற்று இருந்ததால் அன்னூர் காவல் நிலையம் மூடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக போத்தனூர் காவல் நிலையமும் மூடப்பட்டது.

இதையடுத்து, நேற்று (ஏப்ரல் 24) குனியமுத்தூர் காவலர் ஒருவருக்கும் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று குனியமுத்தூர் காவல் நிலையமும் மூடப்பட்டது. அதற்கு பதிலாக குனியமுத்தூர் காவல் நிலையம் அருகில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ முன்வந்த குணமடைந்தவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.