ETV Bharat / state

அமைச்சர் தங்கமணியுடன் விவாதிப்பதற்கான தேதி மற்றும் நேரத்தினை அறிவித்த கொங்கு ஈஸ்வரன்...!

author img

By

Published : Mar 30, 2019, 5:33 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணியுடன் விவாதிப்பதற்கான தேதி மற்றும் நேரத்தினை கொங்கு ஈஸ்வரன் அறிவித்துள்ளார்.

கொங்கு ஈஸ்வரன்

அண்மையில் பொள்ளாச்சியில் இளைஞர்கள் கும்பல் ஒன்று பெண்களை காதல் வலையில் விழவைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோ எடுத்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆளும் கட்சி தொடர்ந்து உண்மைத் தன்மையை மறைத்து வருகிறது என்றும், இது குறித்து அமைச்சர் தங்கமணி விவாதம் செய்ய தயாரா எனவும் சவால் விடுத்திருந்தார். தற்போது இந்தச் சவாலை அமைச்சர் தங்கமணி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கொங்கு ஈஸ்வரன் பேசியதாவது: வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணி உடன் விவாதிக்க தயார் எனவும், அவர் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் வரவேண்டும் எனவும் அமைச்சர் தங்கமணிக்குப் பதிலளித்தார்.

மேலும் வருமானவரித்துறை மத்தியில் ஆளும் பாஜக அரசு அவர்களுக்கு ஏற்றார் போல் செயல்படுத்தி கொண்டு வருகின்றது. இது முற்றிலும் கண்டிக்க வேண்டியது என தெரிவித்தார்.

அண்மையில் பொள்ளாச்சியில் இளைஞர்கள் கும்பல் ஒன்று பெண்களை காதல் வலையில் விழவைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோ எடுத்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இந்நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆளும் கட்சி தொடர்ந்து உண்மைத் தன்மையை மறைத்து வருகிறது என்றும், இது குறித்து அமைச்சர் தங்கமணி விவாதம் செய்ய தயாரா எனவும் சவால் விடுத்திருந்தார். தற்போது இந்தச் சவாலை அமைச்சர் தங்கமணி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது குறித்து இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த கொங்கு ஈஸ்வரன் பேசியதாவது: வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணி உடன் விவாதிக்க தயார் எனவும், அவர் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் வரவேண்டும் எனவும் அமைச்சர் தங்கமணிக்குப் பதிலளித்தார்.

மேலும் வருமானவரித்துறை மத்தியில் ஆளும் பாஜக அரசு அவர்களுக்கு ஏற்றார் போல் செயல்படுத்தி கொண்டு வருகின்றது. இது முற்றிலும் கண்டிக்க வேண்டியது என தெரிவித்தார்.

Intro:அமைச்சர் தங்கமணியுடன் பொள்ளாச்சி விவகாரம் குறித்து விவாதிக்க தயார் ! இடம், நேரம் குறித்த கொங்கு ஈஸ்வரன்


Body:பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஆளும் கட்சி தொடர்ந்து உண்மைத்தன்மையை மறைத்து வருகிறது என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

இது குறித்து விவாதம் செய்ய தயாரா என அமைச்சர் தங்கமணிக்கு சவால் விடுத்தார் இந்த சவாலை அமைச்சர் தங்கமணி ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் இன்று நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தனியார் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து அமைச்சர் தங்கமணி உடன் விவாதிக்க தயார் எனவும் அவர் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவே வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதுகுறித்து அனைத்து ஊடகங்களும் முன்பு பொதுவாக விவாதிக்க தயார் எனவும் அதற்கான நேரம் மற்றும் இடத்தை குறித்து இன்று தெரிவித்தார்.


அமைச்சரால் வர இயலவில்லை என்றால் அவரே நேரம் இடத்தை தேர்வுசெய்து கூறவேண்டும். மேலும் வருமானவரித்துறை மத்தியில் ஆளும் பாஜக அரசு அவர்களுக்கு ஏற்றார் போல் செயல்படுத்தி கொண்டு வருகின்றது .இது முற்றிலும் கண்டிக்க வேண்டியது என தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளரும் இருவரும் ஒரே மேடையில் விவாதிக்க வேண்டும் எனவும் இவ்வாறு விவாதம் நடத்தினால் நாமக்கல் மாவட்டம் தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களைவிட முன்னோடியாக திகழும் என்றார். அவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் என்ன செய்வார்கள் என்று பொதுமக்களிடையே இருவரும் விவாதம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.


Conclusion:இந்த விவாதம் மூலம் மக்கள் உண்மையானவர்களை கண்டறிய முடியும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.