ETV Bharat / state

'என்னிடம் அதிகாரம் இருந்தால் 3 மாதங்களில் கரோனாவை தடுப்பேன்' - கிருஷ்ணசாமி

author img

By

Published : Apr 27, 2021, 7:14 PM IST

கோயம்புத்தூர்: தன்னிடம் அதிகாரம் கொடுத்தால் மூன்று மாதங்களில் கரோனாவை கட்டுப்படுத்திவிடுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு சில நபர்களை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி உள்ளார்கள். இந்தக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்காதது ஏற்புடையது அல்ல.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. முழு ஊரடங்கிற்கு அரசுகள் தள்ளிக் கொண்டு இருக்கின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இதற்கு ஆளுநர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மாவட்ட, ஊராட்சி அளவில் தகுந்த கட்டுப்பாடுகளைச் செய்ய வேண்டும்.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வருகின்ற ஒன்றாம் தேதியிலிருந்து பல்வேறு ஊராட்சிகளில் மாணவர் அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இன்றைய சூழலில் இந்தியாவிற்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதைவிட முகக்கவசங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி தயாரிப்பதற்கு இந்தியாவில் மத்திய அரசு இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. இது ஏன் என்று தெரியவில்லை? தடுப்பூசி தயாரிக்க வசதிகள் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு அனுமதியளிக்க வேண்டும். இரண்டு நிறுவனங்களால் மட்டும் அனைவருக்கும் தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்ய இயலாது.

அதேபோன்று தடுப்பூசியின் விலையையும் 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை மட்டும் விற்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். மே 2ஆம் தேதியன்று நடைபெற இருக்கக்கூடிய வாக்கு எண்ணிக்கையைக்கூட தள்ளிவைக்கலாம். இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போட்டுவிட்டு அதனைத் தளர்த்த வேண்டிய அவசியம் என்ன, என்னிடம் அதிகாரத்தை கொடுத்தால் மூன்றே மாதங்களில் கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்துவேன்" என்று தெரிவித்தார்.

கோயமுத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற பெயரில் ஒரு சில நபர்களை மட்டுமே அழைத்து கூட்டம் நடத்தி உள்ளார்கள். இந்தக் கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சிக்கு அழைப்பு விடுக்காதது ஏற்புடையது அல்ல.

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. முழு ஊரடங்கிற்கு அரசுகள் தள்ளிக் கொண்டு இருக்கின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துகள் தட்டுப்பாடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இதற்கு ஆளுநர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி மாவட்ட, ஊராட்சி அளவில் தகுந்த கட்டுப்பாடுகளைச் செய்ய வேண்டும்.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வருகின்ற ஒன்றாம் தேதியிலிருந்து பல்வேறு ஊராட்சிகளில் மாணவர் அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இன்றைய சூழலில் இந்தியாவிற்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதைவிட முகக்கவசங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

தடுப்பூசி தயாரிப்பதற்கு இந்தியாவில் மத்திய அரசு இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. இது ஏன் என்று தெரியவில்லை? தடுப்பூசி தயாரிக்க வசதிகள் உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் அரசு அனுமதியளிக்க வேண்டும். இரண்டு நிறுவனங்களால் மட்டும் அனைவருக்கும் தடுப்பூசி தேவையை நிவர்த்தி செய்ய இயலாது.

அதேபோன்று தடுப்பூசியின் விலையையும் 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை மட்டும் விற்பது அனைவருக்கும் நன்மை பயக்கும். மே 2ஆம் தேதியன்று நடைபெற இருக்கக்கூடிய வாக்கு எண்ணிக்கையைக்கூட தள்ளிவைக்கலாம். இதனை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு போட்டுவிட்டு அதனைத் தளர்த்த வேண்டிய அவசியம் என்ன, என்னிடம் அதிகாரத்தை கொடுத்தால் மூன்றே மாதங்களில் கரோனா தொற்றைத் தடுத்து நிறுத்துவேன்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.