ETV Bharat / state

மூன்றாவது அணி ஏற்படுத்த வேண்டும் - கமல் - kamal haasan

கோவை: வாய்ப்புக்காக கெஞ்சாமல் மூன்றாவது அணியை நாமே ஏற்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய கமல்
author img

By

Published : Apr 8, 2019, 1:01 PM IST

கோவை மக்களவைத் தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட அதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பேசிய அக்கட்சியின் துணைத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான மகேந்திரன், ”தொழில்துறை, ஜிஎஸ்டி, சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாடு, திறன் மேம்பாடு, விமான நிலைய மேம்பாடு உட்பட 24 அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், ”குறிப்பிட்ட காலத்தில் திட்டங்கள் செயல்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம். சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது. ஆனால், அந்த சிஸ்டத்தை நாம்தான் கெடுத்தோம். களைய வேண்டியதை தூக்கிப்போட்டு விட்டால் அனைத்தும் சரியாகிவிடும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். அதனால் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை கொடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். பிரதமர் தேர்வு இந்த முறை வித்தியாசமாக இருக்கும் என கூறிய கமல் அதற்கு காரணமாக மக்கள் நீதி மய்யமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மூன்றாவது அணிக்கான வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வாய்ப்புக்காக கெஞ்சாமல் மூன்றாவது அணியை நாமே ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

கோவை மக்களவைத் தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட அதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பேசிய அக்கட்சியின் துணைத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதியின் வேட்பாளருமான மகேந்திரன், ”தொழில்துறை, ஜிஎஸ்டி, சிறு, குறு, நடுத்தர தொழில் மேம்பாடு, திறன் மேம்பாடு, விமான நிலைய மேம்பாடு உட்பட 24 அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.

அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல், ”குறிப்பிட்ட காலத்தில் திட்டங்கள் செயல்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம். சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது. ஆனால், அந்த சிஸ்டத்தை நாம்தான் கெடுத்தோம். களைய வேண்டியதை தூக்கிப்போட்டு விட்டால் அனைத்தும் சரியாகிவிடும். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும். அதனால் மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை கொடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். பிரதமர் தேர்வு இந்த முறை வித்தியாசமாக இருக்கும் என கூறிய கமல் அதற்கு காரணமாக மக்கள் நீதி மய்யமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மூன்றாவது அணிக்கான வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், வாய்ப்புக்காக கெஞ்சாமல் மூன்றாவது அணியை நாமே ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.     கோவை



தேசிய அளவில் மூன்றாவது அணி நிச்சயம் வந்தே தீரும் எனவும் தற்போது அந்த மனப்பாங்கு வந்திருப்பதாகவும், நாடு முழுவதும் பெரும் தலைவர்கள் இது குறித்து யோசிக்கின்றனர் எனவும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்  கமல் தெரிவித்தார்.


கோவை தனியார் ஹோட்டலில் மக்கள் நீதி மையத்தின் கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் வெளியிட  அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் பெற்றுக்கொண்டார். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பேசிய அக்கட்சியின் துணைத் தலைவரும், கோவொ  வேட்பாளருமான மகேந்திரன் , தேர்தல் அறிக்கையில் மாநிலத்தை தாண்டி,  மக்களவை தொகுதிகளில் உள்ள பிரச்சனைகளுக்காக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது  எனவும் தெரிவித்தார். தொழில்துறை, ஜிஎஸ்டி, சிறு,குறு,நடுத்தர தொழில் மேம்பாடு, திறன் மேம்பாடு, விமான நிலைய மேம்பாடு உட்பட 24 தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். யானைகள் வழித்தடங்கள் மீட்கப்பட வேண்டும், முறையான ஆய்வாளர்களிடம் வழிகாட்டுதல் பெற்று வழித்தடங்கள் மீட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல் , குறிப்பிட்ட காலத்தில் திட்டங்கள் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை நாம் இழந்துவிட்டோம் எனவும் சிஸ்டம் கெட்டுப் போய்விட்டது , ஆனால் அந்த சிஸ்டத்தை நாமதான கெடுத்தோம் என தெரிவித்தார்.களைய வேண்டியதை தூக்கிப் போட்டு விட்டால் அனைத்தும் சரியாகிவிடும் என கூறிய அவர் ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும் எனவும் அதனால் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார் . 60 ஆண்டுகளில் மக்களிடம் நிறைய அன்பைப் பெற்று விட்டதாக கூறிய கமல், சிறிய கிராமங்களில் மக்களின் கண்களை பார்ப்பதிலிருந்து தனக்கு உத்வேகம்  கிடைப்பதாக தெரிவித்தார்.

டார்ச்லைட் கண் கூசும் அளவிற்கு பிரகாசமாக இருக்கும் எனவும் கமல் தெரிவித்தார் . பிரதமர் தேர்வு இந்த முறை வித்தாயசமாக  இருக்கும் என கூறிய கமல் அதற்கு காரணமாக மக்கள் நீதி மையம் இருக்கும் எனவும் தெரிவித்தார்.  இப்படி இருந்தால்தான் பஸ் மீது ஏறி நின்று  மகளின் மீது  சுடுவது போன்ற செயல்கள் நிற்கும் எனக்கூறிய அவர், மூன்றாவது அணிக்கான வாய்ப்பு இருக்கின்றது எனவும் , மூன்றாவது அணிக்கு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மூன்றாவது அணி நிச்சயம் வந்தே தீரும் என கூறிய கமல் , தற்போது அந்த மனப்பாங்கு வந்திருப்பதாகவும்  கூறிய அவர், நாடு முழுவதும் பெரும் தலைவர்கள் இது குறித்து யோசிக்கின்றனர் எனவும் கமல் தெரிவித்தார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.