ETV Bharat / state

பணியின்போது மருத்துவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

author img

By

Published : Sep 26, 2019, 7:54 AM IST

கோவை: அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் பணியில் இருந்தபோதே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

doctor

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு பகுதியில் வசித்துவந்தவர் பழனிச்சாமி(49). இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயன்முறை மருத்துவராக பணியாற்றி வந்தார்.

நேற்று வழக்கம்போல பணிக்கு வந்த அவர், மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றபோதே திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பழனிச்சாமிக்குக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண் வயிற்றில் கட்டியா, கர்ப்பமா என்பது கூட தெரியாத மருத்துவர்கள்

கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு பகுதியில் வசித்துவந்தவர் பழனிச்சாமி(49). இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயன்முறை மருத்துவராக பணியாற்றி வந்தார்.

நேற்று வழக்கம்போல பணிக்கு வந்த அவர், மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்றபோதே திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பழனிச்சாமிக்குக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பெண் வயிற்றில் கட்டியா, கர்ப்பமா என்பது கூட தெரியாத மருத்துவர்கள்

Intro:கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர் வேலையில் இருக்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.Body:கோவை அரசு மருத்துவர், அரசு மருத்துவமனையில் பணியின் போது மயங்கி விழுந்து உயிர் இழப்பு.


கோவை சாய்பாபா காலனி, அழகேசன் ரோடு பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி (வயது 49), இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு வருடங்களாக இயன்முறை மருத்துவர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் இன்று வழக்கம் போல் மருத்துவமனைக்கு பணிக்கு வந்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென மயங்கி தரையில் விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு தூக்கி கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பழனிசாமிக்கு ஒரு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். திடீர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக அங்குள்ள டாக்டர்கள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அங்கு உள்ள டாக்டர் இடையே சோகத்தை உருவாக்கியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.