ETV Bharat / state

ஈடிவி பாரத் எதிரொலி: ஆபத்தை ஏற்படுத்தும் ஈட்டிகள் நீக்கம்!

கோவை: ஈடிவி பாரத் தமிழ் செய்தியின் எதிரொலியால் தனியார் சுற்றுச்சுவரில் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பதிக்கப்பட்டிருந்த 131 ஈட்டிகளை வனத் துறையினர் நீக்கியுள்ளனர்.

kovai
kovai
author img

By

Published : Jan 4, 2020, 10:25 AM IST

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குள்பட்ட மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் சாலை சம்பரவள்ளி பிரிவில் தனியாருக்குச் சொந்தமான சுற்றுச்சுவரில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளைத் தடுக்க ஈட்டிகள் பதிக்கப்பட்டிருந்தன.

இச்சுவரில் அமைக்கப்பட்ட ஈட்டிகளால் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வனத் துறைக்கு அதனை அகற்ற கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான செய்தி ஈடிவி பாரத் தமிழில் ஜனவரி 3ஆம் தேதி வெளியானது.

ஈட்டிகள் அகற்றப்பட்டபோது

அதனைத்தொடர்ந்து இச்செய்தி வனத் துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்த சிறுமுகை வனத் துறையினர் சுற்றுச்சுவரின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுவரில் பதிக்கப்பட்டிருந்த 131 ஈட்டிகளையும் அகற்றினர்.

வனத் துறையின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்த விலங்கு நல ஆர்வலர்கள், செய்தியாக வெளியிட்ட ஈடிவி பாரத் தமிழுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சந்தன மரக்கடத்தலைத் தடுக்க வலியுறுத்தி வனத்துறையினரிடம் கோரிக்கை!

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்குள்பட்ட மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் சாலை சம்பரவள்ளி பிரிவில் தனியாருக்குச் சொந்தமான சுற்றுச்சுவரில் யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகளைத் தடுக்க ஈட்டிகள் பதிக்கப்பட்டிருந்தன.

இச்சுவரில் அமைக்கப்பட்ட ஈட்டிகளால் யானை, சிறுத்தை, மான் உள்ளிட்ட வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என சமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ந்து வனத் துறைக்கு அதனை அகற்ற கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான செய்தி ஈடிவி பாரத் தமிழில் ஜனவரி 3ஆம் தேதி வெளியானது.

ஈட்டிகள் அகற்றப்பட்டபோது

அதனைத்தொடர்ந்து இச்செய்தி வனத் துறை அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்த சிறுமுகை வனத் துறையினர் சுற்றுச்சுவரின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுவரில் பதிக்கப்பட்டிருந்த 131 ஈட்டிகளையும் அகற்றினர்.

வனத் துறையின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்த விலங்கு நல ஆர்வலர்கள், செய்தியாக வெளியிட்ட ஈடிவி பாரத் தமிழுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சந்தன மரக்கடத்தலைத் தடுக்க வலியுறுத்தி வனத்துறையினரிடம் கோரிக்கை!

Intro:ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி தனியார் சுற்றுச் சுவரில் வன விலங்குகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பதிக்கப்பட்டிருந்த 131 ஈட்டிகளை வனத்துறையினர் அகற்றினர்.Body:கோவை வனக் கோட்டத்தில் உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் _சத்தியமங்கலம் சாலையில் சம்பரவள்ளி பிரிவு என்ற இடத்தில் தனியார் சுற்றுச் சுவரில் யானைகள் வருவதை தடுக்க ஈட்டிகள் பதிக்கப்பட்டு இருந்தது. இந்த கம்பிகளால் யானை உள்ளிட்ட வன உயிரினங்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை செய்தது தொடர்பான செய்தி நேற்று நமது ஈடிவி பாரத்தில் செய்தி பதிவு செய்திருந்தோம், இது குறித்து வனத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற சிறுமுகை வனச்சரகர் பழனிராஜா தலைமையிலான வனத்துறையினர் வீட்டின் உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்களிடம் இது குறித்துப் பேசி இந்த ஈட்டிகளால் யானை உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து சுவற்றில் பதிக்கப்பட்டிருந்த 131 ஈட்டிகளையும் அப்புறப்படுத்தினர். வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு விலங்கு நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்ததோடு இதனை செய்தியாக வெளியிட்ட ஈ டிவி பாரத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.