ETV Bharat / state

தொடர் மழைப்பொழிவால் யானைச் சவாரி ரத்து: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

கோவை: பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப்பில் தொடர் மழையால் யானைச் சவாரி ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

author img

By

Published : Jun 23, 2019, 8:45 AM IST

யானைச் சவாரி

பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப்பிற்கு தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு அதிக அளவில் வருகின்றனர். இங்கு உள்ள கோழிக்கமுத்தியில் 24 வளர்ப்பு யானைகளைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வனத் துறையினர் வாகன வசதி செய்து உள்ளனர்.

யானைச் சவாரி ரத்து

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் டாப்சிலிப் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் யானைச் சவாரியை வனத் துறையினர் ரத்து செய்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த டாப்சிலிப் வன அலுவலர் நவீன் கூறும்போது, தற்சமயம் கன மழை பெய்துவருவதால் யானைச் சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் யானைச் சவாரி செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப்பிற்கு தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு அதிக அளவில் வருகின்றனர். இங்கு உள்ள கோழிக்கமுத்தியில் 24 வளர்ப்பு யானைகளைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வனத் துறையினர் வாகன வசதி செய்து உள்ளனர்.

யானைச் சவாரி ரத்து

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் டாப்சிலிப் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் யானைச் சவாரியை வனத் துறையினர் ரத்து செய்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த டாப்சிலிப் வன அலுவலர் நவீன் கூறும்போது, தற்சமயம் கன மழை பெய்துவருவதால் யானைச் சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் யானைச் சவாரி செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார்.

பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்சிலிப்பில் தொடர் மழையால் யானை சவாரி ரத்து சுற்றுலாபயணிகள் ஏமாற்றம் .  பொள்ளாச்சி - 22.  பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப்பிற்க்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்  விடுமுறை நாட்களான சனி ,ஞாயிறு டாப்சிலிப்பிற்க்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர் இங்கு உள்ள கோழிக்கமுத்தியில் 24 வளர்ப்பு யானைகள் பரமரிக்கப்படுகிறது, இதனை காண சுற்றுலா பயணிகள் வருகின்றனர் யானைகளை சுற்றுலா பயணிகள் கண்டு கழிக்க வனத்துறையினர் வாகன வசதி செய்து உள்ளனர்,காட்டுக்குள் சவாரி செய்யபடும் வளர்ப்பு யானைகள் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பயன்படுத்தப்படுகிறது,இதையடுத்து தென்மேற்க்கு பருவ மழை  தொடங்கி உள்ளதால் டாப்சிலிப் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் யானை சவாரியை வனத்துறையினர் ரத்து செய்து உள்ளனர் இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனை அடுத்து செய்தியார் சந்திப்பின் போதுடாப்சிலிப் வன அலுவலர் நவீன் அவர்கள் கூறும்போது   தற்சமயம் கன மழை பெய்து வருவதால் யானை சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது மழை குறைந்தால் சுற்றுலா பயணிகள் யானை சவாரி செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.