ETV Bharat / state

ரேஷன் கடையை சூறையாடிய யானைக் கூட்டம்!

author img

By

Published : Sep 16, 2020, 7:14 PM IST

கோவை : வால்பாறையை அடுத்த கருமலை தோட்டப்பகுதியில் ஐந்து யானைகள் அடங்கிய யானைக் கூட்டம் ஒன்று ரேஷன் கடையை சூறையாடிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

elephant-herd-looted-ration-shop
elephant-herd-looted-ration-shop

கோவை, வால்பாறையை அடுத்த கருமலை தோட்டப்பகுதியில் உள்ள ரேஷன் கடையை நள்ளிரவு நேரத்தில் உடைத்து, உள்ளிருந்த அரிசி, பருப்பு, சக்கரை மற்றும் இதரப் பொருள்களை ஐந்து யானைகள் அடங்கிய யானைக் கூட்டம் ஒன்று சேதப்படுத்தியுள்ளது.

இதையடுத்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அங்கு வந்த வனத்துறையினர், யானைக் கூட்டத்தை விரட்டி காட்டுக்குள் அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ரேஷன் கடையை சூறையாடிய யானை கூட்டம்

முன்னதாக, கடந்த வாரமும் யானைக் கூட்டம் ஒன்று அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையை சூறையாடியது. தவிர, அடிக்கடி ஊருக்குள் வரும் யானைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

கோவை, வால்பாறையை அடுத்த கருமலை தோட்டப்பகுதியில் உள்ள ரேஷன் கடையை நள்ளிரவு நேரத்தில் உடைத்து, உள்ளிருந்த அரிசி, பருப்பு, சக்கரை மற்றும் இதரப் பொருள்களை ஐந்து யானைகள் அடங்கிய யானைக் கூட்டம் ஒன்று சேதப்படுத்தியுள்ளது.

இதையடுத்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அங்கு வந்த வனத்துறையினர், யானைக் கூட்டத்தை விரட்டி காட்டுக்குள் அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

ரேஷன் கடையை சூறையாடிய யானை கூட்டம்

முன்னதாக, கடந்த வாரமும் யானைக் கூட்டம் ஒன்று அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையை சூறையாடியது. தவிர, அடிக்கடி ஊருக்குள் வரும் யானைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படியும் அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:சாலை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.