ETV Bharat / state

சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேர் கைது! - Eight arrested for betting on rooster fights in pollachi

பொள்ளாச்சி: நெகமம் அருகே சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

rooster
rooster
author img

By

Published : Jan 15, 2021, 8:53 PM IST

Updated : Jan 15, 2021, 9:13 PM IST

பொள்ளாச்சி நெகமம் அருகேயுள்ள தாசநாயக்கன்பாளையம் காத்தாடி காடு பகுதியில், சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, நெகமம் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில், நெகமம் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்,24, ரமேஷ், 34, அங்கமுத்து, 38, மொகவனூர் மணிகண்டன், 36, சுல்தான்பேட்டை வடிவேல், 26, ஜக்கார்பாளையம் கிட்டுசாமி, 55, எஸ்.குமாரபாளையம் திருமலைசாமி, 35, மெட்டுவாவி செந்தில்குமார், 35 உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள், ரூ.20 ஆயிரத்து 410 ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி நெகமம் அருகேயுள்ள தாசநாயக்கன்பாளையம் காத்தாடி காடு பகுதியில், சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, நெகமம் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில், நெகமம் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்,24, ரமேஷ், 34, அங்கமுத்து, 38, மொகவனூர் மணிகண்டன், 36, சுல்தான்பேட்டை வடிவேல், 26, ஜக்கார்பாளையம் கிட்டுசாமி, 55, எஸ்.குமாரபாளையம் திருமலைசாமி, 35, மெட்டுவாவி செந்தில்குமார், 35 உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள், ரூ.20 ஆயிரத்து 410 ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Last Updated : Jan 15, 2021, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.