ETV Bharat / state

சூயஸ் நிறுவனத்திற்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Jan 29, 2020, 3:30 PM IST

கோவை: சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்துசெய்யக்கோரி கோவையில் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை திமுக ஆர்ப்பாட்டம் கோவையில் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம் DMK to protest in Kovai DMK to protest
DMK to Protest Againtst SUEZ Water Company

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடிநீர் உரிமையை ரத்துசெய்யக்கோரியும், குடியிருப்புப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதை கைவிடக் கோரியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினரின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, மாநில அரசைக் கண்டித்தும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் சூயஸ் குடிநீர் திட்ட ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க மறுப்பதாகவும் குடிநீர் கட்டணம் உயர வாய்ப்புள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் திமுகவினர்

இதனால், வார்டு வாரியாக குடியிருப்புப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே இத்திட்டங்களைக் கைவிடும்வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க:

திருப்பூர் பின்னலாடை முன்னேற்றத்திற்கு மத்திய பட்ஜெட்டில் வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன?

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குடிநீர் உரிமையை ரத்துசெய்யக்கோரியும், குடியிருப்புப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதை கைவிடக் கோரியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறையினரின் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, மாநில அரசைக் கண்டித்தும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் சூயஸ் குடிநீர் திட்ட ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க மறுப்பதாகவும் குடிநீர் கட்டணம் உயர வாய்ப்புள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் செய்யும் திமுகவினர்

இதனால், வார்டு வாரியாக குடியிருப்புப் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுவதோடு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. எனவே இத்திட்டங்களைக் கைவிடும்வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இதையும் படிங்க:

திருப்பூர் பின்னலாடை முன்னேற்றத்திற்கு மத்திய பட்ஜெட்டில் வைக்கப்படும் கோரிக்கைகள் என்ன?

Intro:சூயஸ் நிறுவனத்திற்கு பழக்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்ய கோரி கோவையில் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்


Body:கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக குடிநீர் உரிமையை ரத்து செய்ய கோரியும் குடியிருப்பு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதை கைவிடக் கோரியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்த காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அப்போது மாநில அரசை கண்டித்தும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது சூயஸ் குடிநீர் திட்ட ஒப்பந்த விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க மறுப்பதாகவும் குடிநீர் கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர் வார்டு வாரியாக குடியிருப்பு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைப்பதால் சுகாதார சீர் கேடு ஏற்படுவதோடு தொற்று நோய்கள் பரவும் எனவும் கூறிய அவர்கள் இத்திட்டத்திற்கு இத்திட்டங்களை கைவிடும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தனர் இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.