ETV Bharat / state

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தேமுதிக!

author img

By

Published : Dec 21, 2020, 5:00 PM IST

கோவை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவதூறாக பேசிய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேமுதிகவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

கோவை
கோவை

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இந்தத் தேர்தலோடு அவர் அரசியலில் இருந்து காணாமல் போவார் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் செல்வராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிகவினர் இரு தினங்களுக்கு முன்னர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனையடுத்து செல்வராஜ் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து முன்னாள் சூலூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக உறுப்பினர் தினகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .

முற்றுகையிட்ட தேமுதிக கட்சியினர்

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசை நேரில் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவதூறாக பேசிய செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். தேமுதிகவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்துவிட்டு நகைக்கடையில் கொள்ளை முயற்சி!

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை இந்தத் தேர்தலோடு அவர் அரசியலில் இருந்து காணாமல் போவார் என பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் செல்வராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேமுதிகவினர் இரு தினங்களுக்கு முன்னர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனையடுத்து செல்வராஜ் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து முன்னாள் சூலூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக உறுப்பினர் தினகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .

முற்றுகையிட்ட தேமுதிக கட்சியினர்

பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசை நேரில் சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவதூறாக பேசிய செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். தேமுதிகவினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:

நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்துவிட்டு நகைக்கடையில் கொள்ளை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.