ETV Bharat / state

"மேட்டுப்பாளையம் உயிரிழப்பிற்கு வீட்டு உரிமையாளரும், அரசு அலுவலர்களும் பொறுப்பேற்க வேண்டும்" - கே.பாலகிருஷ்ணன்! - CPM

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவரிடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த இடத்தை பார்வையிட்ட சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், உயிரிழப்பிற்கு வீட்டு உரிமையாளரும், அரசு அலுவலர்களும் பொறுப்பேற்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

mettupalayam
mettupalayam
author img

By

Published : Dec 3, 2019, 2:00 PM IST

கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நேற்று சுவரிடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தை இன்று நேரில் பார்வையிட்ட சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், "வீட்டின் சுற்றுச்சுவரை இவ்வளவு உயரமாக கட்டவேண்டிய அவசியமில்லை.

சுற்றுச்சுவர் பாதுகாப்பாக இல்லையென இரு தினங்களுக்கு முன்பே உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவத்திற்கு வீட்டின் உரிமையாளரும், அரசு அலுவலர்களும் பொறுப்பேற்க வேண்டும். இப்பகுதியில் பாதுகாப்பற்ற சுற்றுச்சுவர்களை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்திற்கெதிராக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து, வழக்கு போட்டிருப்பது கண்மூடித்தனமான ஒன்று. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப வேண்டும். இப்பகுதி மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். இரவோடு இரவாக உயிரிழந்தவர்களை தீ மூட்டி எரிக்க வேண்டிய அவசியமென்ன" என்றார்.

இதையும் படிங்க: சுவர் இடிந்து விழுந்த 17 பேரின் உடல் ஒரே இடத்தில் தகனம்!

கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நேற்று சுவரிடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தை இன்று நேரில் பார்வையிட்ட சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், "வீட்டின் சுற்றுச்சுவரை இவ்வளவு உயரமாக கட்டவேண்டிய அவசியமில்லை.

சுற்றுச்சுவர் பாதுகாப்பாக இல்லையென இரு தினங்களுக்கு முன்பே உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவத்திற்கு வீட்டின் உரிமையாளரும், அரசு அலுவலர்களும் பொறுப்பேற்க வேண்டும். இப்பகுதியில் பாதுகாப்பற்ற சுற்றுச்சுவர்களை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்திற்கெதிராக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து, வழக்கு போட்டிருப்பது கண்மூடித்தனமான ஒன்று. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப வேண்டும். இப்பகுதி மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். இரவோடு இரவாக உயிரிழந்தவர்களை தீ மூட்டி எரிக்க வேண்டிய அவசியமென்ன" என்றார்.

இதையும் படிங்க: சுவர் இடிந்து விழுந்த 17 பேரின் உடல் ஒரே இடத்தில் தகனம்!

Intro:Body:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பவகுதியில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிர்  இழந்த இடத்தை சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.



பின் செய்தியாளர்களுக்கு  கே.பாலகிருஷ்ணன் பேட்டி



வீட்டின் காம்பவுன்ட் சுவரை இவ்வளவு உயரமாக கட்டவேண்டிய  அவசியம் இல்லை 



காம்பவுன்ட் சுவர் பாதுகாப்பாக இல்லை 

என 

இரு தினங்களுக்கு முன்னர் சொல்லி இருக்கின்றனர். ஆனால் நடவடிக்கை இல்லை



இந்த சம்பவத்திற்கு  வீட்டு உரிமையாளரும், அரசு அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்



இந்த பகுதியில் அடுத்தடுத்து உள்ள காம்பவுண்ட் சுவர்களை நீக்க வேண்டும்



உயிரிழந்தவர்களின்  குடும்பத்தினருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்



போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து ,வழக்கு போட்டு இருப்பது கண்மூடித்தனமான நடவடிக்கை



கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும்  விடுதலை செய்து அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப வேண்டும்



இந்த பகுதி மக்கள்  அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்க  வேண்டும்



உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் மக்கள் அதிகாரிகளை நாட வேண்ட இருக்கின்றது. அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளவதில்லை



எந்த வன்முறையும்  நடக்காத போது அங்கு போலிஸ் வன்முறையை கையாண்டு இருக்க வேண்டியதில்லை



இரவோடு இரவாக உயிரிழந்தவர்களை  தீ மூட்டி எரிக்க வேண்டிய அவசியம் தமிழக காவல் துறைக்கு எங்கிருந்து வந்தது. ஏன்  தமிழக காவல் துறை பதட்டப்படுகின்றது என கே.பாலகிருஷ்ணன் கேள்வி


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.