ETV Bharat / state

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கு: கொள்ளையன் விஜய்க்கு டிச.26 வரை நீதிமன்ற காவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 5:14 PM IST

Coimbatore Jos Alukkas robbery: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கைவரிசை காட்டிய கொள்ளையன் விஜய் ஆந்திராவில் கைது செய்யப்பட்ட நிலையில், டிச.26 ஆம் தேதி வரை குற்றவாளிக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27 ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையனைப் பிடிக்க, 5 தனிப்படைகள் அமைத்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் நகரில் பொருத்தப்பட்டிருந்த 300 கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பதிவான உருவம் மற்றும் நகைக்கடையில் பதிவான விரல் ரேகையை ஆய்வு செய்து, கொள்ளையடித்த நபர் தருமபுரியை சேர்ந்த 'விஜய்' என்பது தெரியவந்தது.

பின்னர் தனிப்படையினர், தலைமறைவான விஜய்யின் மனைவி நர்மதாவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் வைத்து கைது செய்தனர். விஜய்யின் மாமியார் யோகராணியை தருமபுரி இலங்கை அகதிகள் முகாமில் வைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து விஜய் கொள்ளையடித்த தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய்யைத் தேடிவந்த தனிப்படையினர், தருமபுரி வனப்பகுதியில் மறைந்திருப்பதை அறிந்து பிடிக்க முயற்சித்தனர்.

ஆனால், விஜய் பிடிபடவில்லை. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றபோது, வீட்டின் மேற்கூரை மீது ஏறி ஓட்டை பிரித்து அங்கிருந்து தப்பியதாக துணை ஆணையர் சந்தீஸ் தெரிவித்தார். இதையடுத்து, விஜய் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்த தனிப்படையினர், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து சென்னை வருவதை கண்டுபிடித்தனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஜய்யை சுற்றிவளைத்து கைது செய்தனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் விஜய்யை அனுமதித்தனர். பின்னர், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்ராஜா 26ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விஜயை வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளைக்கு மூளையாக இருந்த பெண்! கொள்ளையனை நெருங்கிய போலீஸ்..முழுப்பின்னணி என்ன?

கோயம்புத்தூர்: கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27 ஆம் தேதி இரவு புகுந்த மர்ம நபர் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்ளையனைப் பிடிக்க, 5 தனிப்படைகள் அமைத்து கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார். ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை மற்றும் நகரில் பொருத்தப்பட்டிருந்த 300 கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பதிவான உருவம் மற்றும் நகைக்கடையில் பதிவான விரல் ரேகையை ஆய்வு செய்து, கொள்ளையடித்த நபர் தருமபுரியை சேர்ந்த 'விஜய்' என்பது தெரியவந்தது.

பின்னர் தனிப்படையினர், தலைமறைவான விஜய்யின் மனைவி நர்மதாவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் வைத்து கைது செய்தனர். விஜய்யின் மாமியார் யோகராணியை தருமபுரி இலங்கை அகதிகள் முகாமில் வைத்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து விஜய் கொள்ளையடித்த தங்க நகைகள் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து விஜய்யைத் தேடிவந்த தனிப்படையினர், தருமபுரி வனப்பகுதியில் மறைந்திருப்பதை அறிந்து பிடிக்க முயற்சித்தனர்.

ஆனால், விஜய் பிடிபடவில்லை. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் சுற்றிவளைத்துப் பிடிக்க முயன்றபோது, வீட்டின் மேற்கூரை மீது ஏறி ஓட்டை பிரித்து அங்கிருந்து தப்பியதாக துணை ஆணையர் சந்தீஸ் தெரிவித்தார். இதையடுத்து, விஜய் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்த தனிப்படையினர், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருந்து சென்னை வருவதை கண்டுபிடித்தனர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விஜய்யை சுற்றிவளைத்து கைது செய்தனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினர் விஜய்யை அனுமதித்தனர். பின்னர், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்-2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்ராஜா 26ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விஜயை வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளைக்கு மூளையாக இருந்த பெண்! கொள்ளையனை நெருங்கிய போலீஸ்..முழுப்பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.