கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியிலிருந்து சிஏஏ எதிர்ப்பு போராட்டத்திற்காக டெல்லி சென்று வந்த ஏழு பேருக்கு கரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்தப் பரிசோதனையில் ஏழு பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் பொள்ளாச்சி துணை ஆட்சியர் வைத்தியநாதன், பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகாசலம், ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாசலம், வால்பாறை துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் ஆனைமலையில் கரோனாவால் பாதித்த நபர்கள் வசித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் 1500 பேர் சுகாதாரத் துறை சார்பாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பொள்ளாச்சியிலிருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஆனைமலை பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.