ETV Bharat / state

கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்! - பி.எஸ்.ஜி மாணவர்கள் போராட்டம்

கோவை: டெல்லியில் கல்லூரி மணவர்களை காவலர்கள் தாக்கியதைக் கண்டித்து பி.எஸ்.ஜி மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

college-students-and-lawyers-protest-against-caa-in-coimbatore
college-students-and-lawyers-protest-against-caa-in-coimbatore
author img

By

Published : Dec 18, 2019, 10:28 PM IST

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் முன்னின்று போராட்டங்களை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முழக்கங்கள் எழுப்பினர்.

கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

இதனிடையே கோவை விமான நிலையத்திலலிருந்து பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி வழியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செல்வதால் அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது. ஆளுநர் கல்லூரியைக் கடந்தவுடன் மாணவர்களிடம் காவல் துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் மாணவர்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்

இதேபோல் கோவை அரசுக் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் உள்ளே போராட்டம் நடத்தினர். அதேபோல் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: 'காங்கிரஸ் இருந்தபோது இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை எழவில்லை' - அழகிரி

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தினர். இதனைக் கண்டித்து கோவையில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் முன்னின்று போராட்டங்களை செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முழக்கங்கள் எழுப்பினர்.

கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

இதனிடையே கோவை விமான நிலையத்திலலிருந்து பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி வழியாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செல்வதால் அங்கு காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது. ஆளுநர் கல்லூரியைக் கடந்தவுடன் மாணவர்களிடம் காவல் துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பாக பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் மாணவர்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்

இதேபோல் கோவை அரசுக் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் உள்ளே போராட்டம் நடத்தினர். அதேபோல் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: 'காங்கிரஸ் இருந்தபோது இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க கோரிக்கை எழவில்லை' - அழகிரி

Intro:டெல்லியில் கல்லூரி மணவர்களை காவலர்கள் அடித்ததை கண்டித்து கோவையில் பி.எஸ்.ஜி மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் போராட்டம்.Body:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையினரை கண்டித்து கோவையில் பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் அண்டை நாடுகளிலிருந்து குடிபெயரும் முஸ்லிமல்லாதவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது இதை எதிர்த்து பல எதிர்க்கட்சியினர் முஸ்லிம் அமைப்பினர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முழக்கங்கள் எழுப்பினர். நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி வழியாக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் செல்வதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது அதனால் மாணவர்கள் வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் கல்லூரியை கடந்தவுடன் மாணவர்களிடம் காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது அதன்பின் மாணவர்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பி எஸ் ஜி கல்லூரி மாணவர் கார்முகில் டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்களை கண்டித்தும் மாணவர்களுக்கு ஆதரிக்கும் வகையில் இந்த போராட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தார்.

உங்கள் நிகழ்வை வலியுறுத்தியே கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் உள்ளே போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய மாணவர் தினேஷ் இந்த குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றும் மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த குடியுரிமை சட்ட மசோதாவானது மக்களை பிரிக்கும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்தார் மேலும் இதுகுறித்து கவர்னரிடம் கோரிக்கை தெரிவிக்கலாம் என்ற நிலையில் காவலர்களின் அடக்குமுறையால் அது நிறைவேறாமல் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.