ETV Bharat / state

கோவை பெண் காவலருக்கு கரோனா

author img

By

Published : Apr 21, 2020, 12:12 AM IST

கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் 40 வயதான பெண் காவலருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை பெண் காவலருக்கு கரோனா
கோவை பெண் காவலருக்கு கரோனா

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. இதுவரை 133 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 54 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 53 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 40 வயதான பெண் காவலருக்கு மட்டும் தொற்று இருப்பது இன்று உறுதியானது. இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோவை பெண் காவலருக்கு கரோனா
கோவை பெண் காவலருக்கு கரோனா

இவர் மேட்டுப்பாளையம் அவினாசி சாலையில் கஞ்சப்பள்ளி சோதனை சாவடியில் கடந்த ஒரு வாரமாக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து பெண் காவலருடன் பணியாற்றிய 4 காவலர்கள், பெண் காவலரின் குடும்பத்தினர் ஆகியோர் தனிமைப்படுத்தபட்டு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவிவருகின்றது. இதுவரை 133 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 54 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கோவை மாவட்டம் அன்னூரில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 53 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 40 வயதான பெண் காவலருக்கு மட்டும் தொற்று இருப்பது இன்று உறுதியானது. இதனையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோவை பெண் காவலருக்கு கரோனா
கோவை பெண் காவலருக்கு கரோனா

இவர் மேட்டுப்பாளையம் அவினாசி சாலையில் கஞ்சப்பள்ளி சோதனை சாவடியில் கடந்த ஒரு வாரமாக பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து பெண் காவலருடன் பணியாற்றிய 4 காவலர்கள், பெண் காவலரின் குடும்பத்தினர் ஆகியோர் தனிமைப்படுத்தபட்டு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.