ETV Bharat / state

நேபாள மாணவர் கோவை கல்லூரியில் தூக்கிட்டுத் தற்கொலை! - nepal student commit suicide in covai

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்ற நேபாள மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

nepal student suicide
author img

By

Published : Aug 22, 2019, 3:13 PM IST

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் சந்தேஷ் நிபானி. இவர், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி பயிரியல் துறையில் முதுகலைப் பட்டம் பயின்றுவந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வெகுநேரம் ஆகியும் சந்தேஷ் தன் அறையைவிட்டு வெளிவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக விடுதி மாணவர்கள் சந்தேஷ் தங்கியிருந்து அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

அப்போது, சந்தேஷ் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இதுபற்றி விடுதி காப்பாளரிடம் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் விடுதி காப்பாளர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் சந்தேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து, மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பல்கலைக்கழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள நாட்டைச் சேர்ந்தவர் சந்தேஷ் நிபானி. இவர், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்துள்ள மாணவர்கள் விடுதியில் தங்கி பயிரியல் துறையில் முதுகலைப் பட்டம் பயின்றுவந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வெகுநேரம் ஆகியும் சந்தேஷ் தன் அறையைவிட்டு வெளிவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக விடுதி மாணவர்கள் சந்தேஷ் தங்கியிருந்து அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

அப்போது, சந்தேஷ் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இதுபற்றி விடுதி காப்பாளரிடம் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் விடுதி காப்பாளர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் சந்தேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து, மாணவனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பல்கலைக்கழக மாணவர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Intro:கோவை வேளாண் பல்கலைக்கழக விடுதியில் நேபாள நாட்டை சார்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை..Body:

நேபாள நாட்டை சார்ந்த சந்தேஷ் நிபானி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிரியல் துறையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.இவர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் இவரது அறை இன்று காலை வெகுநேரமாக திறக்காத நிலையில் அருகில் உள்ள சக மாணவர்கள் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது சந்தேஷ் நிபானி தூக்கிட்டு இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர்.இதனையடுத்து விடுதி காப்பாளர் ஆர்.எஸ்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.