ETV Bharat / state

கோவையில் 100 கிலோ போலி நெய் பாட்டில்கள் பறிமுதல்!

author img

By

Published : Feb 5, 2020, 8:25 AM IST

கோயம்புத்தூர் : குனியமுத்தூர் அருகே உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில், சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ போலி நெய் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன

coimbatore 100 kilo adulterated ghee seized
coimbatore 100 kilo adulterated ghee seized

கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதி, அன்னம்மாநாயக்கம் சந்து, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சில கடைகளில் பாமாயில், டால்டாவினை கொண்டு போலியாக நெய் தயாரித்து அதனைச் சந்தை போன்ற இடங்களில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

போலி நெய் பாட்டிகளை பறிமுதல் செய்யும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள்

இதையடுத்து, சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ போலி நெய் பாட்டில்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் நெய்த் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த அம்சா, ராஜேஷ்வரி, ராஜாமணி, கலா, முனிஸ்கா, அழகுபாண்டி, ராஜேஷ்வரி, முத்துரகு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : போலி நகை வைத்து வங்கி ஊழியர் ரூ. 45 லட்சம் மோசடி ?

கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதி, அன்னம்மாநாயக்கம் சந்து, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சில கடைகளில் பாமாயில், டால்டாவினை கொண்டு போலியாக நெய் தயாரித்து அதனைச் சந்தை போன்ற இடங்களில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

போலி நெய் பாட்டிகளை பறிமுதல் செய்யும் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள்

இதையடுத்து, சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள 100 கிலோ போலி நெய் பாட்டில்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் நெய்த் தயாரிப்பில் ஈடுபட்டுவந்த அம்சா, ராஜேஷ்வரி, ராஜாமணி, கலா, முனிஸ்கா, அழகுபாண்டி, ராஜேஷ்வரி, முத்துரகு ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : போலி நகை வைத்து வங்கி ஊழியர் ரூ. 45 லட்சம் மோசடி ?

Intro:கோவை குனியமுத்தூர் அருகே உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை, சுமார் 30 ஆயிரம் மதிப்பிளான 100 கிலோ போலி நெய் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..
Body:கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதி , அன்னம்மாநாயக்கம் சந்து, மாரியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடிர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சில கடைகளில் பாமாயில், டால்டாவை கொண்டு போலியாக நெய் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் போலி நெய்களை சந்தை போன்ற இடங்களில் சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலி நெய்யை தயாரித்த அம்சா , ராஜேஷ்வரி, ராஜாமணி, கலா, முனிஸ்கா, அழகுபாண்டி, ராஜேஷ்வரி, முத்துரகு ஆகியோரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்கிருந்த போலி நெய் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.