கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண்துறை சாந்த படிப்புகளுக்கான சேர்க்கை பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் தொடங்கப்படும். ஆனால், இம்முறை கரோனா தொற்றின் காரணமாக வேளாண் இளநிலைப்படிப்புக்கான சேர்க்கை தள்ளிச்சென்றது. இந்நிலையில், இணையதளம் வாயிலாக வேளாண் பல்கலைக்கழகத்தில் இன்று (ஆகஸ்ட் 7) முதல் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள 14 உறுப்புக் கல்லூரிகளிலும், 28 இணை உறுப்புக் கல்லூரிகளிலும் உள்ள 10 இளநிலை படிப்பில் சேர இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அனைத்து வேலை நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகத்துக்கு தொலைபேசி வாயிலாக அழைத்து விவரங்களை சேகரித்துக்கொள்ளலாம். இந்தச் சேர்கைக்கு விண்ணப்பிக்க 17.09.2020ஆம் தேதி இறுதி நாள் ஆகும். மேலும், 29.09.2020 தேதியன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.